ஒரு அவதூறு வழக்கின் கதை -சவுக்கு இணையம்

சவுக்கு இணையதளத்துக்கும் நக்கீரன் காமராஜுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.   2009ம் ஆண்டு சவுக்கு இணையதளம் தொடங்கப்பட்டபோது சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.   பத்திரிக்கையாளர்கள் இழைக்கும் தவறுகள், அவர்களின் அரசியல் சாயங்கள் குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவராது.  அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நக்கீரன் காமராஜ் குறித்து சவுக்கு தளத்தில் விரிவாக செய்தி வெளியானது.   அந்த கட்டுரை சவுக்கு தளத்தை பத்திரிக்கையாளர்கள் இடையே அறிமுகப்படுத்தியது.   காமராஜ் குறித்து வெளியான கட்டுரையை அவருக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்கள் நம்பவில்லை.   உள்நோக்கத்தோடு பார்ப்பன சக்திகளின் தூண்டுதலில் பொய் எழுதப்பட்டது என்று செய்தி பரப்பினார்கள்.   ஆனால் காமராஜ் குறித்து தொடர்ந்து சவுக்கு தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டே வந்தது.   2010ம் ஆண்டு, 2ஜி ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில், காமராஜ் வீடு சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, சவுக்கு சொல்லிய செய்திகள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமானது.

????????????????????????????????????

அண்ணாமலை காமராஜ்.   ஒரு பத்திரிக்கையாளராக பரவலாக அறியப்பட்டாலும், 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஒரு குறுநில மன்னனாகவே செயல்பட்டார் காமராஜ்.   நக்கீரன் இதழை உருவாக்கியவர் கோபால் என்றாலும், நக்கீரனின் மூளையாக செயல்பட்டது காமராஜே.  அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளுமே காமராஜுக்கு நெருக்கம் என்றாலும், திமுகவோடு அவர் உறவு பிரிக்க முடியாதது.   திமுக அரசில் காமராஜ் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றால், எந்த நேரம் வேண்டுமானாலும், முதலமைச்சர் கருணாநிதியின் அலுவலகத்திலோ, வீட்டிலோ நுழைய முடியும்.   முதலமைச்சர் வீட்டிலேயே நுழைய முடிகிறதென்றால், இதர அமைச்சர்களிடம் அவரது செல்வாக்கு குறித்து சொல்ல வேண்டியதில்லை.  ஒரு தொலைபேசி அழைப்பிலேயே திமுக அரசில் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடிய செல்வாக்கை காமராஜ் பெற்றிருந்தார்.

இவரது இந்த நெருக்கம் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், காமராஜ் கேட்டதையெல்லாம் செய்து முடித்தனர்.   திமுக அரசில் முடிசூடா மன்னனாக கருணாநிதியின் குடும்பத்தை கூட விடாமல் மிரட்டி அதிகாரம் செலுத்தியவர் அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்.   இவரும் காமராஜுக்கு மிகவும் நெருக்கம் என்பதால், இவர்கள் இருவரும் 2006 முதல் 2011 வரை அடித்த கூத்துக்களை ஒரு புத்தகமாகவே, நக்கீரன் பதிப்பகம் மூலமாக வெளியிடலாம்.  உளவுத்துறையின் தலைவராக ஜாபர் சேட் இருந்ததால் ஜாபருக்கு பிடிக்காதவர்கள், ஜாபரின் அரசியல் எதிரிகள், காமராஜின் எதிரிகள் என்று ஒருவர் விடாமல் அவதூறு செய்து, செய்திகள் வெளியிட்டனர்.     2ஜி ஊழல் நாடெங்கும் பற்றி எரிகையில், நக்கீரன் மட்டும், 2ஜியில் ஊழலே நடைபெறவில்லை என்று தொடர்ந்து எழுதி வந்ததற்கு முழுக் காரணம், காமராஜ் மட்டுமே.   அதிமுக அரசு பதவியில் இருக்கையில், பின்னாளில் அரசியல் ப்ரோக்கராக மாறிய ராமானுஜத்தோடு நெருக்கமாக இருந்தார் காமராஜ்.  அந்த தொடர்புகளின் வழியாகத்தான், கடத்தல் மன்னன் வீரப்பன் குறித்த செய்திகளை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டது.

ஷபீர் அகமது என்ற இளைஞர், நக்கீரன் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர்.   காமராஜோடு ஒப்பிடுகையில் பணியில் மிகவும் இளையவர்.    அவரோடு காமராஜ் மோதல் போக்கை கடைபிடித்து, அவர் மீது வழக்கு தொடுத்து அவரை தொல்லைக்குள்ளாக்கியதன் பின்னணி என்ன ?    ஒரு சாதாரண இளம் பத்திரிக்கையாளரை ஒரு மூத்த பத்திரிக்கையாளரான காமராஜ் எதிரியாக கருதியதன் பின்கதை என்ன ?

2010ம் ஆண்டில் திமுக அரசில், அறிவாலயத்தில் பேப்பர் பொறுக்கியவன், கக்கூஸ் கழுவியவன், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், “சமூக சேவகர்” என்ற பெயரில் அரசு நிலங்களை சகாய விலைக்கு அள்ளிக் கொடுத்த விவகாரம் என்டிடிவி இந்து செய்தி சேனலில் வெளியாகியது.   ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல், அமைச்சர்களின் மனைவிகள், உதவியாளர்கள், என்று சகட்டு மேனிக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருந்தன.    இப்படி வீட்டு மனை வாங்கியதில் அம்பலப்பட்ட இருவர், நக்கீரன் காமராஜ் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்.  இருவருமே தங்கள் மனைவிகளை சமூக சேவகர் என்று அடையாளப்படுத்தி வீட்டு மனை வாங்கியிருந்தனர்.   அந்த வீட்டு மனைகள் ஒரு சில வாரங்களிலேயே பெரும் கட்டுமான நிறுவனங்களிடம் விற்கப்பட்டன.   இந்த ஊழல் முதல் முதலாக சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

jaffer sait 2

என்டிடிவி செய்தி நிறுவனமும் இந்த ஊழல் குறித்து முழுமையான செய்தியை வெளியிட்டது.  அந்த செய்தியின் பின்னணியில் இருந்தவர் செய்தியாளர் ஷபீர்.     இரவு பகலாக கடுமையாக உழைத்து ஒரு சிறப்பான செய்தித் தொகுப்பை வெளியிட்டார்.    அப்படி செய்தி வெளியிடப்பட்டபோது, ஜாபர் சேட்டின் மனைவி வீட்டு மனை பெற்ற விவகாரம் குறித்து மட்டும் என்டிடிவி இந்துவில் செய்தி வெளியிடாமல் தடுத்தவர் அதன் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில் சாதிக் பாட்சா மற்றும் ஆ.ராசாவோடு இருந்த நெருக்கம் மற்றும் தொழில் தொடர்புகள் காரணமாக ஏற்கனவே காமராஜ் சிபிஐ வளையத்தில் இருந்தார்.   அதன் பின்னர் நடந்த சோதனைகள் அனைவரும் அறிந்ததே.

இதற்கெல்லாம் காரணம் என்று காமராஜ் கருதியது, ஷபீர் அகமது மற்றும் சிபிஐயில் அப்போது எஸ்பியாக இருந்த முருகன்.  2ஜி சோதனைகள் முழுக்க முழுக்க டெல்லி சிபிஐ அதிகாரிகளால் நடத்தப் பட்டது என்ற அடிப்படையைக் கூட காமராஜ் புரிந்து கொள்ளவில்லை.    சிபிஐ எஸ்.பி முருகன் மீது, நக்கீரன் கோபாலே தடுத்த பிறகு கூட, ஏராளமான பொய் செய்திகளை வெளியிட்டார் காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னாளில் முருகனுக்கு எதிராக  அவர் வெளியிட முயற்சித்த ஒரு செய்தியே, காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேற காரணமாக இருந்தது என்பது வரலாற்றுச் சுவடு.

ஷபீரை பழிவாங்க காமராஜ் கையில் எடுத்த ஆயுதம்தான் அவதூறு வழக்கு.    அந்த அவதூறு வழக்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்து, பத்திரிக்கையாளர் ஷபீர், விவரிக்கிறார்.

“அது 2010ம் ஆண்டு.  என்டிடிவி குழுமத்தால் அப்போது சென்னையில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆங்கிலச் சேனலில் ஒரு இளம் நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.   டிசம்பர் 15, 201ம் அன்று, சிபிஐ இந்தியா முழுக்க 2ஜி ஊழல் தொடர்பாக பல்வேறு சோதனைகளை நடத்தியது.  அப்படி சோதனை நடத்திய இடங்களில் ஒன்று நக்கீரனில் இணை ஆசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த காமராஜின் வீடு.

திமுகவோடு காமராஜ் கொண்டிருந்த நெருக்கம் ஒன்றும் ரகசியமானதல்ல.   குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் இடையே அது வெளிப்படையானதொன்று.   காமராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் இதர 2ஜி சோதனைகள் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்பதால், தேசிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இச்சோதனைகள் குறித்து செய்தி ஒளிபரப்பின.   சிபிஐயில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி மற்ற செய்தி நிறுவனங்கள் போலவே நானும் சோதனைகள் குறித்த செய்திகளை எனது சேனலுக்காக வெளியிட்டேன்.

ஒரு பத்திரிக்கையாளனாக எனது வாழ்வு நக்கீரனில்தான் தொடங்கியது.   நான் அப்படி நக்கீரனின் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களை மனதில் வைத்திருப்பாரோ என்ன என்று தெரியவில்லை.    2ஜி சோதனைகள் நடந்த ஒரு சில நாட்களிலேயே நக்கீரன் காமராஜ், நான் அந்த சோதனைகள் குறித்து செய்தி வெளியிட்டு அவரை அவமானப்படுத்தியதாக நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடுத்தார். அவரது மனுவில் அவர் “ஷபீர் நக்கீரன் இணையதளத்தில் அக்டோபர் 2006 முதல் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.   அப்படி பணியாற்றுகையில் பல முறை என்னோடு (காமராஜோடு) அவர் உரையாடியுள்ளார். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் காரணமாக அவர் என் மீது கோபத்தில் இருந்தார்.   பல முறை தனிப்பட்ட வன்மத்தை என் மீது வளர்த்து வந்தார்.   நக்கீரனை விட்டு அவர் வெளியேறிய பிறகு கூட அவருக்கு என் மீதான கோபம் தொடர்ந்து இருந்தது. இந்த உள்நோக்கத்தின் காரணமாக என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார்”

அந்த மனுவில் மேலும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.    “15.12.2010 அன்று என்டிடிவி இந்து சேனல் கீழ்கண்ட செய்தியை வெளியிட்டது.  “காமராஜ் ஆ.ராசா நடத்தும் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.   காமராஜின் மனைவி ஜெயசுதா, நீரா ராடியா நடத்தும் மக்கள் தொடர்பு குழுமத்தின் சென்னை கிளையில் பணியாற்றி வந்தார்.

அந்த சேனலில் இவ்வழக்கின் மூன்றாவது குற்றவாளி ஷபீர் அகமது மாலை 7.30 மணிக்கு ஒரு நேரடி செய்தி வெளியிட்டார்.    சிபிஐ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்  மும்பையில் இயங்கி வரும் மாடர்ன் ஹைடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.   அவரது லேப்டாப் கைப்பற்றப்பட்டது”.

இந்த மான நஷ்ட வழக்கு என்டிடிவி இந்துவின் இணை ஆசிரியர் சஞ்சய் பின்டோ மூத்த ஆசிரியர் ராதிகா ஐயர் மற்றும் என் மீது தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த மூவரும் உள்நோக்கத்தோடு, தவறான, பொய்யான செய்தியை ஒளிபரப்பினர்  என்றும், இந்த செய்தியை அளித்த வகையில் நான் பொறுப்பானவன் என்றும் கூறப்பட்டிருந்தது.

காமராஜ் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தி கிடைத்ததுமே, என்டிடிவி இந்து அலுவலகமே பதறியது.  டெல்லியிலிருந்து விளக்கம் கேட்டு தொடர்ந்து ஈமெயில்கள் வந்தன.  நாங்கள் ஒளிபரப்பிய செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் ஒளிபரப்பியதற்கான ஆதாரங்களை எடுத்து, எங்கள் மீது மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினேன்.   சஞ்சய் பின்டோ, நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கு நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

சில மாதங்களில் என்டிடிவி இந்து சேனலுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.   என்டிடிவி சேனலே நிதி நெருக்கடியில் இருந்ததால், என்டிடிவி இந்து சேனலுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை பட்டவர்த்தனமாக தெரிந்தது.  என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பது புரிந்தது.   வேறு வழியின்றி, ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் பணிக்கு சேர்ந்தேன்.   சில மாதங்களில் என்டிடிவி இந்து செய்தி சேனல், தந்தி டிவிக்கு விற்கப்பபட்ட பிறகு மூடப்பட்டது.

வேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு தொடர்ந்து என்டிடிவி இந்துவில் பணியாற்றி வந்தேன்.  கடைசி நாள், என்னை சஞ்சய் பின்டோ தொலைபேசியில் அழைத்தார்.    “ஷபீர், உன்னுடைய வழக்கை நீதான் நடத்த வேண்டும்.   என்டிடிவி மேலிடம் இந்த முடிவை சொல்லச் சொன்னார்கள்.  உன்னுடைய புதிய நிர்வாகத்திடம் இந்த வழக்கை நடத்தச் சொல்லி கேட்டுப்பார்” என்று கூறினார்.

என்டிடிவி நிறுவனம், சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகாவின் வழக்கை நடத்துகையில், ஹெட்லைன்ஸ் டுடே எப்படி என் மீதான வழக்கை நடத்த சம்மதிப்பார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.   என்டிடிவி நிறுவனம் என்னை கைகழுவ முடிவெடுத்து விட்டது என்ற உண்மை என் முகத்தில் அறைந்தது.  என் வழக்கை நானேதான் தனியாக நடத்த வேண்டும் என்பது புரிந்தது.

எனக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.    எந்த நிறுவனத்துக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றினேனோ, அந்த நிறுவனம் இப்படி திடீரென்று கைவிட்டது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.   என்டிடிவி இந்து நிறுவனம் இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது.  ஆனால் சக பத்திரிக்கையாளர்களால் நிர்கதியாக விடப்பட்ட எனக்கு நடந்தது ஒரு பெரும் அநீதி.

அந்த அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை.   சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் ரத்து செய்து கொண்டனர்.    மிக மிக எளிதாக அந்த மனுவில் என்னுடைய பெயரை அவர்கள் சேர்த்திருக்கலாம்.    ஆனால் அப்படி செய்யவில்லை.    திடீரென்று சஞ்சய் பின்டோ என்னை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ப்ளாக் செய்தார்.    இப்படி அவர் ப்ளாக் செய்தது எந்தவிதமான காரணமும் இன்றி என்பது முக்கியமானது.    என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் அவர்களுக்கு அனைத்து விவகாரங்களையும் விளக்கி, நீண்டதொரு ஈமெயிலை அனுப்பினேன்.  ஆனால் அவரது கனத்த மவுனம் மட்டுமே இன்று வரை பதிலாக இருக்கிறது.

சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேபிகே வாசுகி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “காமராஜ் வீட்டில் சோதனை நடந்ததும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதும் இங்கே யாராலும் மறுக்கப்படவில்லை.   இந்த செய்திகள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விரிவாக செய்தியாக பிரசுரிக்கப்பட்டன.    மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) சோதனை நடந்த இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து, அது என்டிடிவி இந்து சேனலில் ஒளிபரப்பாகியது.

ஆனால் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தியை ஒளிபரப்பியிருக்கையில் மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) மற்றும் காமராஜ் ஆகியோர் இடையே இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்கு தொடுத்து, அதன் காரணமாக சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ராய் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்து தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதால் அது ரத்து செய்யப்பட வேண்டும்.”

இந்த மனுவில் என்னுடைய பெயரையும் சேர்த்திருந்தால் என் மீதான வழக்கும் நிச்சயம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.   ஆனால் என்ன காரணத்தினாலோ நான் தனித்து விடப்பட்டேன்.    என் மீதான வழக்கை என்டிடிவி நிறுவனம் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து எனக்கு எந்தவிதமான விளக்கமும் எந்தத் தரப்பிலிருந்தும் வழங்கப்படவில்லை.

என்னுடைய நண்பர்களின் உதவியோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சண்முகம் என்ற வழக்கறிஞரின் தொடர்பு கிடைத்தது.   நான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தேன்.    சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை ரத்து செய்ய நான் எடுத்த முடிவுகள் பலன் தரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அவதூறு வழக்குகளில் ஆஜராகியுள்ள ரமேஷ் என்பவரின் அறிமுகம் நண்பர்கள் வழியாக கிடைத்தது.   ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்து வரும் விகடன் நிறுவனம் வழக்குகளை துணிச்சலாக எதிர்த்து சந்தித்து வருகிறதென்றால் அதற்கு காரணம் ரமேஷ்தான்.    ரமேஷ் உடனடியாக எனது வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தார்.   பல ஆண்டு காலம், இரவு பகல் பாராமல் உழைத்த என்னுடைய என்டிடிவி நிறுவனம் என்னை கைவிட்ட நிலையில், எவ்வித கட்டணமும் பெறாமல் ரமேஷ் என் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தது இன்று வரை எனக்கு வியப்பையே ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வழக்குகள் எப்போதுமே உங்கள் நேரத்தை விழுங்கும்.    ஆனால் நாங்கள் விடாமல் போராடினோம்.  மொத்தம் இரண்டு சாட்சிகள்.  தமிழக பிஜேபியின் சமூக ஊடக செயலாளர் சுப்ரமணிய பிரசாத் மற்றும் சாரதி சம்பந்தன் ஆகியோர் அந்த இருவர்.

சுப்ரமணிய பிரசாத் குறுக்கு விசாரணைக்கு வர மறுத்து விட்டார்.   மீதம் உள்ள சாட்சியான சாரதி, தனது குறுக்கு விசாரணையில், காமராஜ் மற்றும் அவர் மனைவி ஜெயசுதாவுக்கு 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று சாட்சியமளித்தார்.   இது வழக்கின் போக்கையே மாற்றியது.    இந்த சாட்சியத்துக்கு பிறகு, நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். 24 ஜனவரி 2017 அன்று ஆறு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன்.

மொத்தம் 2555 நாட்கள்.   ஒரு சக பத்திரிக்கையாளரின் பழிவாங்கும் போக்கால் நான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த நாட்கள்.   நக்கீரன் பத்திரிக்கை அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் எதிர்த்து நீதிமன்றத்தில் போராடிய ஒரு குழுமம்.   அவதூறு வழக்குகளை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றுள்ளது.   எந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுகிறார்களோ, அதே சட்டத்தை என் மீது பயன்படுத்தி என்னை அலைக்கழித்தனர் என்பதுதான் வேதனையான உண்மை.

பத்திரிக்கையாளர் ஷபீர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்

ஒரு இளம் பத்திரிக்கையாளராக நான் நக்கீரன் காமராஜை கண்டு அவர் பணியாற்றுகையில் வியந்திருக்கிறேன்.     தமிழ் ஊடகத்திலிருந்து பத்திரிக்கையாளனாக என் வாழ்க்கையை தொடங்கிய எனக்கு என்டிடிவி இந்து முதல் ஆங்கில பணி.   இதன் காரணமாகத்தான் எனது இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறேன்.    உங்களுடன் பணியாற்றும் ஒரு சக பத்திரிக்கையாளனால் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதும், உங்கள் நிர்வாகம் உங்களை நிராதரவாக விடுவதும் கசப்பான உணர்வுகளேயை தரும்.

இந்தியாவைப் பொருத்தவரை, நீதிமன்ற நடைமுறைகள்தான் தண்டனை.     நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு நாளும் அலைவதுதான் தண்டனை.    என் வாழ்வின் ஆறு ஆண்டுகளை இந்த வழக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு என் மீது ஏற்படுத்திய தாக்கம் எளிதானது அல்ல.   எனது முதல் திருமண ஆண்டு நாளன்று நான் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி நேர்ந்தது.  வர்தா புயல் காரணமாக வேறு இடத்துக்கு பணிக்கு சென்றேன்.   சென்னையிலோ வேறு ஏதாவது இடங்களிலோ ஏதாவது ஒரு முக்கிய செய்தி சேகரிக்கச் செல்லும் நெரத்தில் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.   என்னுடைய நேரத்தையும் உழைப்பையும், நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் என்னுடைய வழக்கு அழைப்பதற்காக காத்திருந்து செலவிட்டுள்ளேன்.   அடுத்த தேதி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே அந்த காத்திருப்பு.

என்னுடைய இந்த அலைக்கழிப்பு பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்கொள்வதற்கான வலிமையை எனக்கு அளித்தது.  நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை.  ஒரு பத்திரிக்கையாளனாக எனது கடமையை செய்ததற்காக பழிவாங்கப்பட்டேன்.   இந்த வழக்கின் முடிவு எப்படிப் போகும் என்று எனக்கு கவலை இல்லை.  ஏனெனில் நான் எந்த நிறுவனத்துக்காக உழைத்தேனோ அந்த நிறுவனம் என் வழக்கை கைவிட்டதன் மூலமாக என்னை தண்டித்து விட்டதாகவே உணர்ந்தேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில் என்னோடு நின்று எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.   இந்த வழக்கை சந்திக்கையில் எப்போதும் நான் தனியாக இருந்ததாக உணரவேயில்லை.  நண்பர்களின் ஆதரவு எனக்கு பெரும் வலிமையை தந்தது.

செவ்வாயன்று, இறுதித் தீர்ப்பை எதிர்ப்பார்த்து நான் காத்திருந்த அன்று, தீர்ப்பு எனக்கு எதிராக வரக் கூடும் என்பதையும் எதிர்ப்பார்த்து தயாராக இருந்தேன்.  எனது நண்பர் மற்றும் பத்திரிக்கையாளர் பாரதி தமிழனிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தேன்.  அவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற மேலாளர் ஜேக்கப் மற்றும் அரசு ஆகியோரை பிணையாக நிற்பதற்காக வரச் சொல்லியிருந்தார்.    காலை 10.30 மணி முதல் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்.  காத்திருந்த நிமிடங்கள் வலியுடனேயே கழிந்தன.

நீதிமன்றத்தினுள் நான் அழைக்கப்பட்டதும் அரசு எனக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.   என்னுடைய சக பத்திரிக்கையாளர்களால் நான் கைவிடப்பட்டாலும், எனக்கு பல உயர்வான நட்புகள் கிடைத்தன.   “நான் உங்களை விடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி அறிவித்தபோது நிறைவாக இருந்தது.  தற்போது நான் மீண்டும் என் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

எனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய கோபம் இன்னும் தணியவில்லை.   ஊடகத்துறை குறித்து பக்கம் பக்கமாக பேசும் என்டிடிவி போன்ற ஒரு நிறுவனம், ரவீஷ் குமார் போன்ற பத்திரிககையாளர்களை வைத்திருப்பதை பெருமையாகக் கூறிக்கொள்ளும் ஒரு நிறுவனம், ஒரு நெருக்கடியான நேரத்தில் என்னை கைவிட்டது என்பதை இந்த இடத்தில் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.    என்னுடைய விரிவான ஈமெயிலுக்கு பதில் அனுப்ப மறுத்த பிரணாய் ராய் என்ன விதமான ஊடக தர்மத்தை கடைபிடிக்கிறார் என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை.

அவதூறு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்ற நக்கீரன் போன்ற இதழ் எனக்கு எதிரான அவதூறு வழக்குக்கு துணை நின்றது இரட்டை வேடமா இல்லையா ?    இதுதான் அவர்களின் ஊடக தர்மமா ?

இறுதியாக என்னை நிராதரவாக கைவிட்டதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.    இல்லையென்றால், தன்னந்தனியாக நின்று ஒரு வழக்கை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதை தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். எத்தகைய இடர்களையும் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும், நம்பியவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்பனவற்றை இவர்ளால்தான் கற்றுக் கொண்டேன்.”

என்டிடிவி நிறுவனம் ஏன் ஷபீரை கைவிட்டது என்பதை விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் வெளிவந்தன.

சஞ்சய் பின்டோ, ராதிகா ஐயர் மற்றும் ஷபீர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதை அறிந்துமே, சஞ்சய் பின்டோ, பயத்தில் கதறினார்.    பதறினார்.   எப்படியாவது காமராஜின் காலில் விழுந்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதற்கு பகீரத பிரயத்தனங்களை செய்தார்.   திமுகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காமராஜிடம் பேசுமாறு கூறினார்.   சஞ்சய் பின்டோவின் கல்லூரித் தோழரான தயாநிதி மாறன், மற்றும் பல்வேறு பிரமுகர்களிடம் கெஞ்சினார்.  இறுதியாக காமராஜை காப்பாற்ற ஜாபர் சேட் முன்வந்தார்.    சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயரை கழற்றி விட்டு விடுங்கள்.   ஷபீருக்கு ஒரு பாடத்தை புகட்டுவோம் என்று ஜாபர் பஞ்சாயத்து செய்ததன் அடிப்படையில், என்டிடிவி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  அவர்கள் இருவர் மீதான வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சஞ்சய் பின்டோ

ஒரு வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளரை சிக்கலில் மாட்டி விட்டு, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற ஒரு நிலைப்பாட்டை மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எடுத்தார் சஞ்சய் பின்டோ.    இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.   ஊடக தர்மம், மக்கள் உரிமை, ஜனநாயகம் ஆகியவை குறித்து பெரிய XXXXXX போல, இப்போதும் டெக்கான் க்ரானிக்கிள் போன்ற நாளிதழ்களில் சஞ்சய் பின்டோவின் கட்டுரை வெளிவரும்.   இப்படிப்பட்ட பசுத்தோல் போற்றிய பரதேசிகள்தான் ஊடகங்கள் மூலமாக நமக்கு உபதேசம் செய்கின்றனர். சஞ்சய் பின்டோ குறித்த ஒரு கட்டுரை இணைப்பு  சென்னை உயர்நீதிமன்றம் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கை ரத்து செய்ததற்கு எதிராக இன்று வரை, காமராஜ் மேல் முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரனின் நிலைபாடு என்ன ?

தொடக்கத்தில் காமராஜுக்கு நக்கீரன் நிறுவனம் ஆதரவாகவே இருந்தது.  காமராஜ் வீட்டில் 2ஜி தொடர்பாக நடந்த சோதனைகளை ஊடக சுதந்திரத்துக்கு வந்த சோதனை என்றே நக்கீரன் வர்ணித்தது.   ஆனால் ஒரு கட்டத்தில் நக்கீரனின் வழக்கறிஞர் பெருமாள் அவதூறு வழக்குகள் தொடர்பான நக்கீரனின் நிலைபாட்டுக்கு இது எதிரானது என்றும் வழக்கை தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.   கோபாலே பேசியபோதும், காமராஜ் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தார்.    இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி விட்டார்.   காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேறிய பின்னர்தான், கோபால் தன்னுடைய நிலைபாட்டை தெளிவாக்கினார்.

வழக்கு தொடுத்தாலும், காமராஜ் நீதிமன்றத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார்.    வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு காமராஜ் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.   பல்வேறு அவதூறு வழக்குகளை கையாண்ட அனுபவம் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் குறுக்கு விசாரணையின்போது காமராஜை துளைத்து எடுத்தார்.  பதில் சொல்ல முடியாமல் காமராஜ் திணறினார்.    ஒரு கட்டத்தில் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கேட்டு, தண்ணீர் குடித்தார்.     தான் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதன் மேலாண் இயக்குநராக இருந்ததாகவும், சிபிஐ சோதனைகளுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும், விசாரணையில் காமராஜ் தெரிவித்தார்.    சிபிஐ சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்னும் சிபிஐ வசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி விசாரணையில் திணறினாலும், அவரது நேரத்தை இந்த வழக்கு ஆக்ரமித்துக் கொண்டாலும், காமராஜ் ஒரு வாய்தா தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகை தந்து இந்த வழக்கை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.   ஆனால் பொய் மட்டுமே நிரந்தரமாக வென்று விடுமா என்ன ?   உண்மை இறுதியாக வென்றது.

ஒரு சாதாரண பத்திரிக்கையாளராக, பெரம்பலூரில் இருந்து சென்னை வந்து வாழ்கைகையை தொடங்கிய காமராஜால் இன்று மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் அண்ணாமலை கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மின்னம்பலம் பெயரை விலைக்கு வாங்கி இணையதளத்தை நடத்தி வருகிறார் என்றால் அது அவரது நேர்மையால் அல்ல.

ஒரு மனிதன் அவன் பத்திரிக்கையாளனாக இருந்தாலும் அவதூறால் பாதிக்கப்பட்டால் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடர எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு.  ஆனால் மனைவியின் பெயரில் சமூக சேவகர் சான்றிதழ் வாங்கி, இரண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை திருவான்மியூரில் ஒரு கோடி ரூபாய்க்கு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்த காமராஜுக்கு உண்மையில் மானம் இருக்கிறதா என்ன ?

ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஆபாச நக்கீரன் பத்திரிக்கை

mmm.jpg

12-பக்கம் பேப்பரில் ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஜிங்கா கோல்டு,

ஒன்னு தின்னா நின்னு கேக்கும் கேப்சூல்,முட்டி&இடுப்பு வலி போன்ற பக்கங்கள் எண்ணிக்கை 6-..ஒரே வறட்சி,தளர்ச்சி ,சுறுக்கம்,வீக்கம்.என்ற விளம்பரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.மீதி உள்ள பக்கங்களில் பொய் பொரட்டு,.புளூகு,மூட்டை.அவதுறு,ஆபாசம்,அசீங்கம், அடுத்தவர்களை பற்றிய அந்தரங்கம்.இப்படியான பத்திரிக்கையை தடை செய்யலாமா..? செய்ய கூடாதா,,?

இதில் மான் வேட்டை ஓநாய் என்ற தலைப்பில் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை செய்தியை ”தடை செய் அமைப்பு”கண்காணித்தோம்.

அட கருமம் பிடிச்சவனுகளே..ஏண்டா உங்களுக்கு இந்த மானகெட்ட பொழப்பு..அங்கையும் பொய் பொரட்டு…நக்கீ (ஜிங்க செல்வம்) என்ற மூதேவி இச்செய்தி எடுத்த லச்சணம் அசீங்கத்திலும் அசீங்கம் ஏண்டா டேய் காசு பார்க்க எத்தனை பொழப்பு இருக்கு அதைவிட்டுட்டு
(எளவு வீட்டில் எள் உருண்டை திங்க காசு கேக்கலாமா,,?) பொணந்தின்னி பொறம்போக்கு செய்த மொல்லமாரிதனத்தை சம்பவம் காவல்துறையிடம் ஒரு
தகவல் கொடுத்து விட்டு வந்துள்ளது நம் குழு..

எதுக்குடா உனக்கு இந்த மானகெட்டபொழப்பு இதில் நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே..அடேய் நீ திறப்பது எல்லாம் அடுத்தவர்கள் பெட்ரூமைதானே,,அப்புறம் எப்படி குற்றம் நடக்காமல் இருக்கும்,உன் திறப்பில்.

நக்கீரன் பத்திரிக்கை கூலிப்படை நிருபர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள ஓநாய்களை அனைத்தையும் நம் குழு கண்காணிக்கிறது,அத்தனை ஓநாய்களும் ஒழுக்கம் இல்லாத ஒதவாகரைகள்..ஒவ்வொரு நிருபர்களாக நாம் களையெடுப்போம்.மக்கள் மன்றத்தில் வைத்து முகத்திரை கிழிப்போம்.

மான் வேட்டை ஓநாய்கள் பற்றி தகவல் ..விரைவில்..!!

தாய்மார்களை தேடி,தேடி தரிசாக்கிய தண்ணி வண்டி தாமோதரன் பிரகாஷ்..

தறுதலை தாமோதர பிரகாஷ் காம லீலை..நக்கீரன் பராக்..!! பராக்…!!

உன் முதுகில் ஓராயிரம் மூட்டை அழுக்கை சுமந்து கொண்டு அடுத்தவர்களை பற்றிய அவதூறாக செய்தி எழுதி தன் வயிறு வளர்க்கும் ஆபாச மஞ்சள் பத்திரிக்கையான நக்கீ நிருபர்களில் ஒருவன் தான் இந்த தாமோதர பிரகாஷ்..இரண்டாவது மனைவி மனநலம் சற்று பாதிக்கப்பட்டு தனது தங்கையின் பெயரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டொர் நடத்தி  வருகிறார்,பல்லாவரம்,காசிமேடு,சிந்தாதரி பேட்டை உட்பட ஏராளமான இடங்களில் கடந்த 10 வருடங்களில் மட்டும் பல கோடி ரூபாய்  மதிப்பிலான சொத்துக்களை  வாங்கியிருக்கிறான்.. கேரளாவை பூர்விக்கமாய் கொண்ட இந்த காம கண்ணனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்பது  பற்றிய நீதி விசாரணை நடத்தப்படுவதற்கு முன் ..

முதலில் இந்த மூதேவிக்கு ஒரு சபாஸ் போடுவோம்..

மிகவும் திறமைசாலியான இந்த த.பிரகாஷ் என்ற அயோக்கியபயல் அதற்கு நேர்மாறாக பல பெண்களை நாசம் செய்துள்ளான்..அதுவும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து,பார்த்து பதம் பார்த்த பலே கில்லாடியான இந்த  த.பிரகாஷ் .

இந்த த.பிரகாஷ் என்றவனுக்கு எத்தனை மணைவி என்ற அவனுக்கே சந்தேகமாம் அதில் முதல் மணைவியை கொலை செய்தாக தகவல் வருகிறது.

இந்த கொலையை காவல்துறை விசாரிக்கவேண்டும் என்பது தடை செய் அமைப்பின் கோரிக்கையும் கூட..

த.பிரகாஷ் என்பவன் சென்னை முழுவதும் பல பெண்களை நாசம் செய்து ஜட்டியோடு உட்கார வைத்த நற்காரியங்கள் எல்லாம் பிறகு நாம் தெளிவுபடுத்துகிறோம்.

த.பிரகாஷ் என்பவன் தான் நக்கீரன் பத்திரிக்கை ஆரம்பிக்க தொடங்கிய காலத்தில் இருந்து நக்கீக்கு விசுவாசியாக இருந்துள்ளான்.

நக்கீரனில் வரும் தொடர்கதை மற்றும் முதல்வர் ஜெயலலிதா போன்ற மிக முக்கிய அரசியல் பிரபலங்களை பற்றி பார்க்காமலே பல செய்திகளை பார்த்துப்போல் எழுதும் பல கேடி எழுத்தாளன் என்ற பெருமையும் த.பிரகாஷ் உண்டு..

வீரப்பன் முதன் முதலில் சந்திக்க காட்டுக்கு சென்றவனும்.நித்தியானந்த சாமிகளை பற்றி செய்திகளை சேகரித்தவனும்,மற்றும் சிவகாசி ஜெயலட்சுமி வரை இவனது பட்டியல் நீளும்.

நக்கீரன் கோபால் ஒரு டம்மி பீசா என்ற நீங்கள் நினைப்பது என் மூளைக்கு  ஹெவியா கேக்குது.சொன்னாலும் சொல்லாட்டியும்.நக்கீரன் கோபால் ஒரு டம்மிதான்..நக்கீரன் பத்திரிக்கை வளர்ச்சிக்கு ஆபாச செய்தி மட்டும் அல்ல..இந்த பொம்பளை பொருக்கி தாமோத பிரகாஷ் தான்.

இந்த தாமோத பிரகாஷ் என்பவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக நம்மிடம் கொடுத்த புகார் மற்றும் ஆவணங்களை கொண்டு நீதிமன்றம் சென்று இவன் தோலுறிக்கப்படும்.
இந்த நக்கீரன் பத்திரிக்கை கதையும் முடிக்கப்படும்.

இந்த நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எடுக்க முற்பட்ட நமக்கு..இந்த நக்கீரன் நிருபர்களால் பல பெண்களை நாசம் செய்த புகார்களும் சேர்ந்து வருகிறது.
ஆம் அத்தனையும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து பதம் பார்த்துள்ளான் இந்த தாமோதர பிரகாஷ் ..

“நிலா பெண்” என்கின்ற பெயரில் இந்த காமக்கிருக்கன்முகநூல் பலவற்றை  தொடங்கி பல பெரும்புள்ளிகளுக்கு கொக்கி போட்டு,தன் வசப்படுத்தி  அவர்களையும் அவர்களது வக்கிரபுத்திகளையும் ஆதாரமாக்கி அவர்களிடம் பணம் பறித்த கதையும் அம்பலமாகியுள்ளது..அது என்னவோ ஒரு  பெண் மதுரையிலும் இன்னுமொரு நிலா பெண் சென்னையிலும் வசித்துவருகிறார்கள் சென்னைவாசி நடிகை நயன்தாரா புகைப்படம் இடம்பெற்றுஇருக்கிறது..இந்த வளையில் சிக்கி கொண்ட ஒரு அரசியல் புள்ளி நம்மிடம் அசடு வழியாமல் கேட்டார் “அப்ப எங்க ஆதரவு பத்திரிக்கை இல்லையா”என்று ?அவனிடம் பணத்தை இழந்தவர்கள் பட்டியல் நீள்கிறது..

https://www.facebook.com/nila.penn.50

https://www.facebook.com/profile.php?id=100008649902792&fref=ts

இதனை போன்ற 60 க்கும் மேற்படட நிலா பெண்கள் முகநூலில் வலம் வருகின்றனர் ஜாக்கிரதை நண்பர்களே,,

 

“ஒருவன் மலையாளி,ஒருவன் தெலுங்கன் என இரு மொழிக்காரர்களும் சேர்ந்துகொண்டு , தமிழர்கள் மீது நடத்தும் சைலன்ட் தாக்குதலுக்கு பின்னால் எந்தெந்த தேச/மாநில விரோத சக்திகள் இருக்கின்றன என்பதற்கும் விரிவான விசாரணை வேண்டும்”

.

எந்த நேரமும் சரக்கு மற்றும் பான்பராக் போதையில் திளைக்கும் இந்த தாமோதர பிரகாஷ் பற்றிய கோடம்பாக்கம் குடியிருந்த கதை என்ற தலைப்பில் அடுத்த தொடரில் ஆரம்பிக்கிறேன்…

தொடரும் காம லீலை நக்கீரன் எடிட்டர்.திறுதலை தாமோதர பிரகாஷ்..

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’-சவுக்கு இணையம் சுழற்றும் சவுக்கு..

அன்பார்ந்த திரு கோபால் அவர்களே

இந்த கடிதத்தை உங்களுக்கும் காமராஜுக்கும் சேர்த்தே எழுதலாம் என்றுதான் முதலில் தோன்றியது.  நீங்கள் உழைப்பால் இந்தப் பத்திரிக்கையை வளர்த்தீர்கள்.  வலம்புரி ஜானின் உதவியாளராக உங்கள் வாழ்க்கையை தொடங்கி இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள்.   ஆனால் உங்கள் தளபதி காமராஜ் ஒரு ஆண் நீரா ராடியாவாக இன்று உருவெடுத்திருக்கிறார்.  அவரை எந்த வகையிலும் ஒரு பத்திரிக்கையாளராக ஒப்புக் கொள்ள முடியாது என்ற காரணத்தாலேயே, இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் எழுதப் படுகிறது.

 

Gopal_Nakkeeranநக்கீரன் பத்திரிக்கை இன்று ஒரு அசாதாரணமான நெருக்கடியில் உள்ளது.  நெருக்கடி நக்கீரன் பத்திரிக்கைக்கு புதிதல்ல என்றாலும், இது ஒரு அசாதாரணமான நெருக்கடி.

மற்ற பத்திரிக்கைகளை விட, நக்கீரனுக்கு ஒரு தனி இடம் உண்டு.  பெரும்பாலான பாரம்பரிய ஊடகங்கள் பார்ப்பன தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் சூழலில், நக்கீரன் இதழ் தொடங்கப் பட்டு, பெரிய பின்புலம் இல்லாமல் உருவாகியது.  நக்கீரன் இதழ் தொடங்கப் பட்ட போது, இது இன்னும் ஆறு மாதமோ, அல்லது ஒரு வருடமோ என்று ஆருடம் கூறியவர்கள் பலர்.  ஆனாலும் நக்கீரனின் வளர்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது, நக்கீரன் மீது தொடுக்கப் பட்ட ஒடுக்குமுறைதான்.    1991 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, 2001 அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, நக்கீரனை அதிமுக ஆட்சி படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

1991 ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஜெயலலிதா அரசுக்கு எதிராக நக்கீரன் இதழ் வெளிக் கொண்டு வந்த பல்வேறு ஊழல் குறித்த செய்திகளும், அதிமுக அரசின் அடக்குமுறைகள் குறித்த செய்திகளும், பொதுமக்கள் மத்தியில் நக்கீரனுக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.  1996ல் திமுக ஆட்சி வந்ததும், உங்களுக்கு மிகுந்த நற்பெயரும், கருணாநிதியின் நெருக்கமும் கிடைத்தது.  ஆனாலும் கூட, 1996-2001 திமுக ஆட்சியையும் நீங்கள் விமர்சித்தே வந்தீர்கள்.  இப்போது அடிப்பது போல அப்போது ஜால்ரா அடிக்கவில்லை.  ஆனால், திமுக ஆட்சியை விமர்சிப்பதை விட, ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதிலேயே நீங்கள் மிகுந்த அக்கறை செலுத்தினீர்கள்.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் அடைந்த வேதனைகள் சொல்லி மாளாது.   11 ஏப்ரல் 2003ல் உங்களை ஜெயலலிதா அரசு, போடா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சத்தியமங்கலம் காவல்துறையினர் உங்களை கைது செய்து உங்களை சோதனையிட்டதில், நீங்கள் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், தமிழ்நாடு விடுதலைப் படையின் துண்டுப் பிரசுரத்தை வைத்திருந்ததாகவும், உங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.   கீழ் நீதிமன்றத்தில் உங்கள் ஜாமீன் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், ஆறு மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணையின் போது, ஜெயலலிதா அரசு உங்கள் மீது பொய்யாக வழக்கு புனைந்தது அம்பலமானது.

உங்களை கைது செய்ததாக நக்கீரன் இதழ் அலுவலக மேலாளருக்கு தந்தி அனுப்பிய ஆய்வாளர்,  “லைசென்ஸ் இல்லாத ஒரு ரிவால்வரை வைத்திருந்தார்” என்று தெரிவித்திருந்தார்.  அதன் பிறகு, தாக்கல் செய்யப் பட்ட எப்ஐஆரில்  “கோபாலை சோதனையிட்ட போது ”ஒரு கன்ட்ரி மேட் பிஸ்டல், குண்டுகள் மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று இருந்தது. 12 ஏப்ரல் 2003 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த டிஎஸ்பி, ”ஒரு நாட்டுத் துப்பாக்கி, 410 மஸ்கட் குண்டுகள் இரண்டு மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை துண்டுப் பிரசுரங்கள் வைத்திருந்தார்” என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

ஒரே சம்பவத்தில் மூன்று வெவ்வேறு ஆயுதங்கள்  கைப்பற்றப் பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதிலிருந்தே, இந்த வழக்கின் உண்மைத் தன்மை விளங்குகிறது, அதனால் நக்கீரன் கோபாலை ஜாமீனில் விடுதலை செய்கிறோம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு, உச்சநீதிமன்றம் சென்று, உங்கள் ஜாமீனை ரத்து செய்தது. அதன் பிறகு நீங்களும், நக்கீரன் பத்திரிக்கையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அடைந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், நீங்கள் தொடர்ந்து பத்திரிக்கையை நடத்தினீர்கள்.

அப்போது ஜெயலலிதா அரசு உங்கள் மீதும், நக்கீரன் மீதும் தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த பத்திரிக்கை உலகமும் ஒன்றுபட்டு குரல் கொடுத்ததை நீங்கள் மறந்து விட மாட்டீர்கள். எழுத்தாளர் சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் உங்கள் கைதைக் கண்டித்து எழுதியிருந்ததாக நினைவு.

ஆனால், இன்று நீங்களும், நக்கீரனும் தனிமைப் பட்டு நிற்கிறீர்கள்.  உங்கள் மீது, அரசின் துணையோடு, வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை நேரடியாக பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் கூட, வெளிப்படையாக கண்டிக்க முன்வர மறுக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று ஒரு பத்திரிக்கையாளர் சவுக்கிடம் சொன்னது.  “எந்த ஒரு பத்திரிக்கை அலுவலகம் இப்படித் தாக்கப் படுதை நான் நேரில் பார்த்திருந்தாலும் என் ரத்தம் கொதித்திருக்கும்.  ஆனால் இன்று வாய்மூடி மவுனமாக இருக்கிறேன்.  இந்த நிலைமை மிகுந்த வேதனையை அளிக்கிறது. இப்படி ஒரு நிலைமை வருவதற்கு கோபாலும், காமராஜுமே காரணம்” என்றார்.  இந்தப் பத்திரிக்கையாளர் சொன்னதுதான் அனைவரது நிலையும்.

நீங்கள் இன்று அந்நியப்பட்டு நிற்பதற்கு காரணம், ஜெயலலிதாவைப் பற்றி நீங்கள் வெளியிட்ட செய்தி மட்டுமல்ல.  2006 முதல் 2011 வரையிலான உங்கள் நடவடிக்கைகளே.  2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நக்கீரனின் நடவடிக்கைகளை நீங்களே பரிசீலித்துப் பாருங்கள்.    ஜெயலலிதா உங்கள் மீது எடுத்த பழிவாங்கும் நடவடிக்கைகளினால் உங்களுக்கு கோபம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை.  அதற்காக, திமுக ஆட்சியின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவற்றை ஆதரித்தல்லவா எழுதினீர்கள் ?

திமுக ஆட்சியில் கருணாநிதி பத்திரிக்கையாளர்களை படுத்திய பாடு கொஞ்சமான நஞ்சமா ?

ஜாபர் சேட்டை வைத்து பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகட்டும், அழகிரிக்கு எதிராக செய்தி வெளியிட்ட தினபூமி நாளிதழின் ஆசிரியரையும் அவர் மகனையும் கைது செய்ததாகட்டும், சீமான் கைது செய்யப் பட்ட போது பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை அடக்கி ஒடுக்கியதாகட்டும், பெரும்பாலான ஊடகங்களை விளம்பரம் தர மாட்டேன் என்று மிரட்டியதாகட்டும், இத்தனையையும் நீங்கள் வாய் மூடி மவுனமாக ஆதரித்துக் கொண்டல்லவா இருந்தீர்கள் ?

இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று கதறும் நீங்கள், கடந்த திமுக ஆட்சியில் நெற்றிக்கண் மணியை ஜாங்கிட் படாத பாடு படுத்திய போது என்ன செய்தீர்கள் ?   மற்ற விவகாரங்கள் தொடர்பாக கருணாநிதியை அப்போது சந்தித்த பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் நெற்றிக்கண் மணி விவகாரத்தை குறிப்பிட்ட போது, “அவன் அப்படி எழுதுவது மட்டும் சரியா ?” என்று கேட்டார் கருணாநிதி.   கருணாநிதியின் கண்ணசைவோடுதான், ஜாங்கிட், நெற்றிக்கண் மணியின் குடும்பத்தையே பழிவாங்கினார்.  அப்போது எங்கே போனீர்கள் கோபால் ?

உங்களோடு இருக்கும் காமராஜ் கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார் ? ஜாபர் சேட்டோடு அவர் செய்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் ?  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராசா சிக்கிய போது, அவரை ஆதரித்து நீங்கள் என்னவெல்லாம் எழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள் கோபால் அவர்களே…. எவ்வளவோ முயன்றும், உங்களால் கடைசி வரை ராசாவை காப்பாற்ற முடியவில்லையே….   இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது என்று குரல் கொடுக்கிறீர்களே….  உங்கள் தளபதி காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்ட போது, காமராஜின் மனைவி ஜெயசுதா நீரா ராடியாவின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றுகிறார் என்று என்டிடிவி இந்துவில் ஒரு செய்தி வெளியாகியது.  அந்தச் செய்தியை, என்டிடிவி இந்து தவிர்த்து, தேசிய நாளிதழ்கள் உட்பட பல்வேறு இதழ்களும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.  ஆனால், என்டிடிவி இந்துவில் பணியாற்றும் ஒரு இளம் பத்திரிக்கையாளரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே காமராஜ் அவதூறு வழக்கு தொடர்ந்தாரே…. இன்று பத்திரிகை சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள் அந்தக் காரியத்தை தடுத்தீர்களா ?  எப்படி அதை அனுமதித்தீர்கள்.

பத்திரிக்கையாளர்கள் ஊழலை வெளிக் கொணர வேண்டும். ஆனால் பத்திரிக்கையாளரே மத்திய மந்திரியோடு ஊழலில் ஈடுபட்டு, அந்த மத்திய மந்திரியைப் பாதுகாப்பதற்காகவே செய்திகளை வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா கோபால் அவர்களே… உங்கள் தளபதி காமராஜ் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல கோடி ரூபாயை சுருட்டியிருப்பதை மறைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கட்டுரைகள் எழுதி கவர்ஸ்டோரியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் ? மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராசா சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, மக்கள் பெருமளவில் திரண்டு அவருக்கு ஆதரவு அளித்தார்கள், தலித்துகளுக்கு எதிரான பார்ப்பன அரசியலின் பலிகடா ஆ.ராசா என்று செய்தி வெளியிட்டது எந்த ஊடக தர்மம் ?

போலிப் பாதிரியை வைத்து ஈழப் போராட்டத்தில் என்னென்ன துரோகங்கள் செய்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் கோபால்.    கேணல் ராம் என்பவரோடு பேட்டி என்று நீங்கள் வெளியிட்ட செய்தி எத்தனை மோசடி என்பது உங்களுக்குத் தெரியாதா ?

நக்கீரன் பத்திரிக்கை வளர்ந்ததே அதிமுக ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.   ஜெயலலிதாவின்  தனிப்பட்ட பழிவாங்கும் போக்கால், நக்கீரன் மீது தொடுத்த நடவடிக்கைகள், அப்பத்திரிக்கையை உரம் போட்டு வளர்கவே செய்தன.   ஆனால் அப்படி உரம் போட்டு வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கை 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், தன் வேர்களை இழந்தது என்றால் அது மிகையாகாது.

கருணாநிதி என்ன நினைக்கிறாரோ அதுவே நக்கீரனில் செய்தியானது.  ஜாபர் சேட் மனதில் தோன்றுபவையே கவர் ஸ்டோரிகளாகின.   பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்கும் நக்கீரன் பயன்படுத்தப் பட்டது.    ஒவ்வொரு தேர்தலின் போதும், நக்கீரன் வெளியிடும் சர்வேக்களை மக்கள் ஆர்வமாக வாங்கிப் படிப்பது வழக்கம்.  ஆனால், அந்த நம்பிக்கையை சட்டமன்றத் தேர்தலின் போது நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பொய்யாக்கியது. ஊர் உலகமே, அதிமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று எழுதிக்  கொண்டிருந்த போது, நக்கீரன் மட்டும், பிரத்யேக சர்வே என்று திமுக கூட்டணிக்கு 120 இடங்களை வாரி வழங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று காலை கூட, நீங்கள் கலைஞர் டிவியில் அமர்ந்து கொண்டு, திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும் என்று மார்தட்டிக் கொண்டிருந்தீர்கள். இவையெல்லாம் உங்கள்  மீதும், உங்கள் பத்திரிக்கை மீதும் நம்பிக்கையை குறைத்தன.

உங்கள் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது நீங்கள் வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நக்கீரன் எத்தனையோ சோதனைகளை தாங்கியிருக்கிறது.  இதையும் தாங்கும்” என்றீர்கள்.   பத்திரிக்கை சுதந்திரத்துக்காக பிரச்சினைகளை சந்திப்பதும், ஊழலில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பதும் ஒன்றா ?  சமீபத்தில் நடந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள்.   ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன ?  இது தமிழக மக்களின் வாழ்வை பாதிக்கும் அதிமுக்கிய பிரச்சினையா ?  மேலும், உங்கள் செய்திக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ?

இன்றைய தினமணி தலையங்கத்தை எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.

“அரசின் கொள்கை முடிவுகளை, செயல்திட்டங்களை, முறைகேடான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்காக, விமர்சனம் செய்வதற்காக, இடித்துரைப்பதற்காகச் சுதந்திரம் பயன்படுத்தப்படும்போது அது அரசியல் சட்டத்தின் ஆதார சுருதியைச் சார்ந்ததாக இருக்கும். அதே சுதந்திரத்தை இழிவான முறையில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடப் பயன்படுத்தும்போது அதைவிடக் கீழ்த்தரமான கயமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

அரசியல்வாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நீதித்துறையினருக்கு இல்லாத கடமையுணர்வும் பொறுப்புணர்வும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. இவர்கள் சிந்தனாவாதிகள். சமுதாயம் இவர்களை வழிகாட்டிகளாகப் பார்க்கிறது. மேலே சொன்ன மூன்று பிரிவினரின் முடிவுகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வழிநடத்தும் பொறுப்பைத் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டவர்கள் இவர்கள். அதனால்தான் “படித்தவன் தவறு செய்தால் அய்யோ அய்யோவென்று போவான்’ என்று மகாகவி பாரதி சொன்னார்.

இறந்துபோன இருவரிடம் காலம்சென்ற ஒருவர் எப்போதோ சொன்னதாக ஓர் ஆதாரமற்ற அவதூறுச் செய்தியை அட்டைப்படச் செய்தியாக்கித் தனது பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ள நினைப்பது என்பதே தவறு. அதைவிடப் பெரிய தவறு, பொறுப்பான பதவியில் இருப்பவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி அவரது பெயருக்குக் களங்கம் கற்பிக்க விரும்புவது. இப்படிச் செய்பவர்களைப் பத்திரிகையாளர்கள் என்று ஏற்றுக்கொள்வதே அவமானம்.

“சீ, இதுவும் ஒரு பிழைப்பா?’ என்று ஏனைய பிரிவினர் கேட்கிறார்களோ இல்லையோ நிச்சயமாகப் பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேட்க வேண்டும். அதுபோன்ற பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் தனிமைப்படுத்தி அகற்றி நிறுத்த வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.”

இன்று மற்ற பத்திரிக்கையாளர்களின் ஆதரவு கூட இல்லாமல், நீங்கள் தனிமைப் பட்டுப் போயிருப்பதற்கு இதுதான் காரணம் கோபால் அவர்களே. இந்த அட்டைப்படச் செய்தி, பத்திரிக்கை விற்பனையை அதிகரிப்பதற்கான மலிவான வியாபாரத் தந்திரம் என்பதை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் காமராஜின் செயல்பாடுகளால் நக்கீரன் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு, இன்னும் தீரவில்லை. பெரும் செல்வந்தராக உருவாகியுள்ள காமராஜ் இந்த அட்டைப்படச் செய்தியின் பின்னணியில் உள்ளார் என்பது பத்திரிக்கை உலகில் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இத்தகைய சூழலில், உங்களுக்காக யார் போராட்டம் நடத்த முன்வருவார்கள்.

இருப்பதிலேயே மிகுந்த வேதனையை அளிக்கும், மோசமான சூழல் எது தெரியுமா ?    நல்லவர்களின் ஆதரவை இழந்து நிராதரவாக நிற்பதுதான்.    உங்களுக்கு திமுக தலைவரும், அவரின் தொண்டர் அடிப்பொடிகளும் ஆதரவாக குரல் கொடுக்கலாம்.  ஆனால் நல்ல பத்திரிக்கையாளர்கள் குரல் கொடுக்க வர மாட்டார்கள்.

பத்திரிக்கையின் விற்பனை சரிவடைந்து விட்டது என்பதற்காக விற்பனையை தூக்கி நிறுத்த அட்டைப் படத்தில் செக்ஸ் செய்திகளும், அவதூறு செய்திகளும் வெளியிடுவது வேசித்தனம். சவுக்கு தளம் இலவசமாக நடத்தப் படுவது.  இத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்துவதில்லை.  ஆனாலும், சவுக்கு தளத்தில், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறது சவுக்கு.  இலவசமாகத்தானே தருகிறோம் என்று இஷ்டத்திற்கு பொய்யையும் புனைவையில் எழுதினால், ஒரே நாளில் சவுக்கு தனது வாசகர்களின் நம்பிக்கையை இழந்து விடும். ஒரு முறை நம்பிக்கையை இழந்தால், மீண்டும் அந்த நம்பிக்கையை பெறவே முடியாது.   ஒரு இலவச தளத்திற்கே இப்படி கவனமாக இருக்கும் போது, 10 ரூபாய் கொடுத்து உங்கள் புத்தகத்தை வாங்கும் வாசகனிடம் பொய்யைத் திணிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?

ஜெயலலிதா குறித்த கவர் ஸ்டோரி வெளிவந்த பிறகு இன்று நக்கீரன் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது.  நல்லவர்கள் நக்கீரனைக் கண்டு இன்று அறுவெறுப்படைந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.   இது நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம், கோபால் அவர்களே..  செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்

சவுக்கு

-Thanks சவுக்கு…..

அந்தரங்க லீலைகளும்,அவசர ரிஷப்ஷனும்! கோபாலின் கூலிப்படையுடன் ஒரு சந்திப்பு..!!

 

  • கொலை கூட ஒரு கலைபோலவே எங்களுக்கு  பயிற்றுவிக்கப்பட்டது ..
  • 24 மணி நேரமும் நாங்கள் போதையிலேயே திளைக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்ட்து..
  • பரபரப்பான செய்திக்காக அரசின் தலைமை அலுவலக ஒற்றர்களுக்கு பெண்களை கூட்டி கொடுப்பதற்காகவே ஒரு குழு இயங்குகிறது..koolipadai
  • அம்பத்தூருக்கும், பாடிக்கும் நடுவிலே கையகப்படுத்திய ஒரு ஏக்கர் நிலத்திற்காக நாங்கள் செய்த்ததெல்லாம் என்ன..?
  • கோபால்  மகளின் நேரடி ரிஷப்சனில் நீடிக்கும் மர்மம் என்ன?

நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வுகளை….மனம் திருந்திய கூலிப்படை  ஒருவர் விவரிக்கிறார்..விரைவில்…

பயங்கரவாதி நக்கீரன் கோபால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் சகோ-பி.ஜெ

 

நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

யார் இந்த கோபால் மாமா

என்னுடைய கடந்த கால வாழ்க்கை என்று இவன் பொய்யை வெளியிட்டுள்ளான். நான் இவனது கடந்த கால வாழ்க்கையின் உண்மையில் சிறு பகுதியுடன் ஆரம்பிக்கிறேன்.
ஷியாம் அவர்கள் நடத்தி வந்த தராசு பத்திரிகையில் ஓவியம் வரைபவனாக இருந்தவன் தான் நக்கீரன் கோபால் என்பவன். இவனுக்கு படம் வரையத் தெரியுமே தவிர ஒழுங்காக எழுதக் கூட தெரியாது.

இப்போதும் மற்றவர்கள் எழுதுவதைத் தான் தன் பெயரில் வெளியிட்டு வருகிறான்.

தராசு பத்திரிகையில் இருந்து கூலிக்கு எழுதும் சிலரைப் பிடித்து வந்து நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தான். ஆனால் பத்திரிகை ஓடவில்லை

 

 

இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிகை சந்தனக்காட்டுக்கு தனது செய்தியாளர்களை அனுப்பி வீரப்பனிடம் வீடியோ பேட்டி எடுத்தது. கோபால் அந்த செய்தியாளரைச் சரிக்கட்டி அந்த வீடியோவை வாங்கினான். இந்தியா டுடே வெளியிடுவதற்கு முன்பே வீரப்பன் பேட்டியை இவன் வெளியிட்டான். தனது செய்தியாளர்கள் கஷ்டப்பட்டு காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்ததாக புளுகி பல வாரங்கள் தொடர் வெளியிட்டான். இப்போது தான் நக்கீரன் என்ற பத்திரிகை உலகுக்குத் தெரிய வந்தது.

இவனது அறிமுகமே அயோக்கியத்தனத்தில் தான் ஆரம்பமாகிறது.

 

நக்கீரன் போன்ற பத்திரிகை நடத்த மூளை தேவை இல்லை. பணத்துக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட குணமும் கற்பனையும் காமராஜ் போல் காசுக்காக எதையும் செய்யும் இழிபிறவிகளின் உதவியும் இருந்தால் போதுமானது என்பதை தராசு பத்திரிகை அனுபவத்தில் இவன் கற்றுக் கொண்டான்.

 

உதாரணமாக ராமதாஸ், முதல்வரைத் தனியாகச் சந்தித்தார் என்ற செய்தி இவனுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இருவரும் பேசிக் கொண்டது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இவன் எழுதுவான். இருவர் மட்டுமே உரையாடிய போது பேசிக் கொண்டது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று சிந்திக்க மறுக்கும் மக்களின் பலவீனம் தான் இவனுக்கு மூலதனம்

ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை விற்பனைக்காக மாமா வேலைக்கு நிகரான செய்திகளை இவன் எழுதலானான். ஆட்டோ சங்கர் கதை என்ற பெயரில் பெண்களை சூறையாடிய கதைகளை கற்பனை செய்து எழுதி காசாக்கினான். அவ்வளவும் ஆபாசம் புளுகு மூட்டை.

நடிகைகள் பற்றி அந்தக் கால இந்து நேசன் பாணியில் காமக் களஞ்சியத் தொடர் எழுதினான். இதில் பெரும்பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் காம உணர்வை ஊட்டிய எழுத்து விபச்சாரம் தான்

இவன் எழுதியது போல் இவனது குடும்பத்து பெண்களின் காமச் சேட்டைகள் என்று நாம் எழுதினால் அதை இவன் ஜீரணித்துக் கொள்வானா? கோபால் வீட்டுக்குள் ஒருவன் போவதை மட்டும் பார்த்து விட்டு உள்ளே நடந்ததை நாம் இவனைப் போல் எழுதினால் அதை ஜீரணித்துக் கொள்வானா?

 

சட்ட விரோதமாக சந்தன வீரப்பனைச் சந்தித்து தேசத்துக்குத் துரோகம் செய்தவன். சந்தன வீரப்பன் நாடகத்தில் கோடிகளைச் சுருட்டியவன். எழுத்துலகில் காசுக்காக எதையும் செய்யும் இழி பிறவி இவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. அடுத்த இடம் காமராஜ் என்ற எச்சில் பொறுக்கிக்குக் கொடுக்கலாம்.

ரஜினி பெயரை ஆதாயமாக்க ரஜினி ரசிகன் என்று பத்திரிகை நடத்தினான். ஒவ்வொரு நடிகன் பெயரிலும் பத்திரிகக் நடத்தி இளைஞர்களைக் கெடுத்தவன். காசு சம்பாரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேடு கெட்டவன் தான் இந்தக் கோபால்.

கற்பனை கலந்து எத்தனையோ பெண்களைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அவர்களின் குடும்ப வாழ்வைச் சீரழித்தவன். முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் குடும்பச்
சண்டைக்குள் நுழைந்து எதையாவது எழுதி அவர்களின் வாழ்வையே சீரழித்து பணம் சம்பாரிக்கும் அற்பன் தான் இந்தக் கோபால்.

இவனுக்கு இதன் வலியை உணரச் செய்வதற்காக இவனது அந்தரங்கச் சேட்டைகள் பற்றியும் மற்றவர்களின் குடும்பம் பற்றி இவன் எழுதுவது போல் இவனது குடும்பம் பற்றியும் யாராவது எழுதினால் நல்லது. இவனுக்கு கொஞ்சமும் சளைக்காத காம?ராஜ் என்பவன் பற்றியும் அவன் எழுதுவது போன்ற நடையில் யாராவது எழுதினால் தான் இவன் அடங்குவான்.

பத்திரிகை இப்போது சுத்தமாக படுத்து விட்டது. எனவே தான் நபிகள் நாயகம் பற்றி இரண்டு தடவை கற்பனை செய்தி வெளியிட்டு பத்திரிகை விற்பனையைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான். இவனை இப்படியே விட்டால் தொடர்ந்து வாலாட்டுவான் என்பதால் இவனுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

இனிமேல் இவன் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக எழுதினால் பத்திரிகை அலுவகம் இருக்காது என்ற பாடத்தை தவ்ஹீத் ஜமாஅத் படித்துக் கொடுத்தது.

புலி கேசியான புண்ணாக்கு தொடர் எழுதி நிமிர்த்தப் பார்த்தான். ஒன்றும் கை கூடவில்லை

அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் அட்ரஸ் இல்லாத மூன்று பேரின் பேட்டி என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பது.

 

இவன் ஒரு எழுத்து விபச்சாரி என்பதற்கு ஆதாரம் யாரைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும், என்னிடம் இது பற்றி கருத்து கேட்காமல் வெள்யிட்டதில் இருந்து இவன் எழுத்து விபச்சாரி என்பது உறுதியாகிறது.

எழுத்துலக மாமா நக்கீரன் கோபால் கூறுகிறான்

பேட்டியில் இருந்து

இப்படிப்பட்ட சூழலில் தான், 1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில் களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியது. பி.ஜே.வின் வன்முறை கலந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள். குண்டு வைக்க தூண்டியது பி.ஜே.தான். இதனால் அப்போதே பி.ஜே.வை அழைத்து விசாரித்தது தமிழக உளவுத்துறை. சந்தேக வலை தன்னை சுற்றி விழுவதை அறிந்த பி.ஜே., குண்டு வைத்தவர்களை சொல்கிறேன் என்று சொல்லி எங்களை காட்டிக் கொடுத்தார். எங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் குண்டு வைக்கவே கிடையாது” என்று விவரித்தனர்.

இப்படி மூவர் சொன்னதாக இவன் எழுதுகிறான்.

நமது விளக்கம்

இவர்கள் குண்டு வைக்கவில்லை என்று மூவரும் சொல்கின்றனர். குண்டு வைக்காத இவர்களைப் பற்றி நான் காவல் துறையில் சொல்லி இருந்தால் அது எப்படி காட்டிக் கொடுத்ததாக ஆகும்? குண்டு வைக்காத இவர்கள் மீது நான் பொய்யாக தகவல் கொடுத்தால் அதை ஏற்று காவல் துறை வழக்கு போட்டிருக்குமா?

நாங்கள் தான் குண்டு வைத்தோம்; அதை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று இவர்கள் கூறினால் தான் நான் காட்டிக் கொடுத்தாக ஆகும். நாங்கள் குண்டு வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்’ பீஜே காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். முரண்பட்ட இரண்டில் எது உண்மை.

குண்டு வைக்காத நாலு அப்பாவிகளைப் பற்றி இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே காவல் துறை வழக்குப் பதிவு செய்யுமா? நான் தமிழக முதல்வராக இருந்து அப்படிச் சொன்னால் வேண்டுமானால் நடக்கலாம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல் துறை என்னை விசாரித்தது உண்மை. அதற்குக் காரணம் குண்டு வைத்தவர்கள் என் பெயரையும் இழுத்து விட்டது தான். அதை அல் உம்மா தொடரில் விளக்கியுள்ளேன்.

பேட்டியில் இருந்து

குண்டு வெடிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால்… முஸ்லிம்களின் மதகுருக்கள் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் இவர் இருந்துள்ளார். உதாரணத்திற்கு… 8.8.97-ல் கே.கே நகர் பள்ளிவாசல் மதகுரு கமருஸ்ஜமான் கொல்லப்படுகிறார். பி.ஜே.வி.ன் தூண்டுதலில் இது நடந்தது. பள்ளி ஜமாத்தின் புகாரிலே பி.ஜே. பெயர் இருக்கிறது

என்று மூவரும் சொன்னதாக கோபால் சொல்கிறான்.

எனது பதில்

கொல்லப்பட்ட மத குருக்கள் யார்?

கொன்றவர்கள் யார்?

பீஜே சொல்லித் தான் நான் மத குருக்களைக் கொலை செய்தேன் என்று யாராவது போலீஸிலோ நீதிமன்றத்திலோ சொல்லி இருக்கிறார்களா?

அப்படிச் சொல்லி விட்டு பீஜே பின்னணியில் இருந்தார் என்று கூறினால் தான் அது பதில் சொல்லத் தக்கதாக இருக்கும்.

பள்ளி ஜமாஅத்தின் புகாரிலேயே பிஜேயின் பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஜமாஅத்தின் புகாரின் என் பெயர் இருக்கிறதா என்பது நினைவில் இல்லை. ஆனால் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் ஒருவர் கொல்லப்பட்டால் அதன் பின்னணியில் பலர் சந்தேகிக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம். அப்பட்டமாகத் தெரிந்த திருவிடைச்சேரி கொலையில் என் பெயரை சிலர் இழுத்து விடுவதை பார்க்கிறோம்.

ஆனால் கமருல் ஜமான் குடும்பத்தைப் பள்ளி நிர்வாகம் கை விட்டது. அந்தக் குடும்பத்தினர் நான் அமைப்பாளராக இருந்த தமுமுகவை அணுகி உதவி கேட்டனர். அவர்களுக்காக உணர்வு இதழ் மூலம் நிதி திரட்டி அந்தத் தொகையை வழங்கினோம். அவரது பிள்ளைகள் படிப்புக்கும் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்தோம். பள்ளி நிர்வாகிகள் என் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அதைப் பொய்யாக்கி விட்டனர்.

குண்டு வைக்காத இவர்கள் பெயரை நான் சொன்னதும் இவர்களைக் காவல் துறை கைது செய்தது என்று கூறுகின்றனர். அப்படியானால் பள்ளிவாசல் நிர்வாகம் என் பெயரைச் சொல்லி இருந்தும் காவல் துறை அந்த வழக்கை ஏன் என் மீது போடவில்லை. அன்று அரசுக்கும் காவல் துறைக்கும் நாங்கள் (தமுமுக) கடும் எதிரிகளாக இருந்தோம். எங்களுக்கு எதிரான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு வாக்கு மூலம் இருந்து அது உண்மையாகவும் இருந்தால் என்னைத் தானே அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது இவர்களின் வாக்கு மூலத்தில் இருந்தே தெளிவாகிறது.

பேட்டியில் இருந்து

அதேபோல நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொல்ல சில இளைஞர்கள் போகிறார்கள். அவரை கொல்ல இளைஞர் கள் முயற்சித்தபோது அவரது மனைவி கொல்லப்பட்டு விடுகிறார். அந்த இளைஞர்களை அனுப்பியது பி.ஜே.தான். ஆனால் அப்பாவி இளைஞர்கள் சிலரை இந்த சம்பவத்தில் மாட்டிவிட்டுவிடு கிறார். 14வருடங்களாக இன்னமும் சிறையில் இருக்காங்க அந்த அப்பாவி இளைஞர்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்

எனது பதில்

ஆலிம் ஜார்ஜ் விஷயத்தில் கொல்ல முயன்ற இளைஞர்கள் அப்படி சொன்னார்களா?வாக்கு மூலம் கொடுத்தார்களா? நீதி மன்றத்தில் சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் இதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமாவது இருக்கும். நாங்கள் மூவரும் தான் ஆலிம் ஜார்ஜை கொல்ல முயன்றோம் பீஜே தூண்டி விட்டார் என்று கூறப் போகிறார்களா? இந்த வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட  குற்றச்சாட்டு இம்மூன்றும் தான்.

இது தவிர பொதுவாக சில குற்றச் சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.

பேட்டியில் இருந்து

அதுவும் முஸ்லிம்களிடம் தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சை கையிலெடுப்பது இவரது வாடிக்கை.

எனது பதில்

செல்வாக்கு சரியும் போதெல்லாம் பீஜே இப்படிச் செய்வார் என்ற இந்த அபத்தமே இவர்களைத் தோலுரித்துக் காட்ட போதுமானாது.

செல்வாக்கு குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை. அதையே ஒரு ஆதாரமாகக் காட்டும் போது அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.

ஜுலை 4 மாநாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு என்றாலும் அதைத் தோல்வியுறச் செய்வதற்காக பீஜே என்ற தனிமனிதனை மையப்படுத்தியே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். அந்த மாநாடு தோல்வியில் முடிந்திருந்தால் செல்வாக்கு சரிந்து விட்டது எனலாம்.

இவர்கள் சிறைக்குப் போகும் போது இருந்ததை விட இலட்சம் மடங்கு வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலட்சக்கணக்கானோர் கூடிய மாநாடு சாட்சி

நாட்டின் பிரதமரையே தாமதமின்றி சந்திக்க முடிவது மற்றொரு சான்று.

செல்வாக்கு சரிந்து விட்டது என்பதே பச்சைப் பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது.

மேலும் நான் செல்வாக்குக்கு என்றும் ஆசைப்பட்டதில்லை. ஜாக் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் தான் நான் அதன் பொறுப்பை விட்டு விலகினேன். தமுமுக அபார வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் முதல் நிலை பொறுப்பாகிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நானாக விலகினேன். தொண்டனாக தொடர்ந்தேன். அதன் பின் தவ்ஹீத் ஜமாஅத் மபெரும் மக்கள் இயக்கமாக உள்ள இந்த நேரத்தில் நான் அதன் தலைவர் பத்வி மேலாண்மைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றை விட்டு விலகி அதில் உறுப்பினாரக் இருக்கிறேன். ஜெயிலில் இருந்து வந்தவுடன் அமைப்பாளர் பதவிக்கு பேரம் பேசி செல்வாக்கு பெற துடிப்பவர்கள் இதைச் சொல்வது தான் கேலிக்கூத்து.
செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சைக் கையில் எடுப்பார் என்று கூறும் இவர்கள் எனது வன்முறை பேச்சுக்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட முடியாது.

ஒன்று மட்டும் உண்மை

இவர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மட்டுமே உண்மை.

1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காது; நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன்.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் இருந்தனர். அவ்வாறு தான் இருந்தேன். அதன் காரணமாக சட்டமும் அரசும் நமக்கு எதிராகவே உள்ளன. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சமுதாயமும் அன்றைக்கு எண்ணியது. அதையே நானும் பிரதிபலித்துள்ளேன். அந்தப் பேச்சுக்களும் அரசுக்கு எதிராகத் தான் இருந்ததே தவிர பிறசமய மக்களுக்கு எதிராக இருக்கவில்லை. புரிந்து கொள்ளாத சிலர்  அந்த நேரத்தில் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.

உணர்ச்சி வேகத்தில் அந்தக் கருத்தில் இருந்த நான் ஜனநாயக ரீதியில் நாம் போராடாமல் அரசியல் கட்சிகளின் பின்னே சென்றது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தேன்.

ஜனநாயக ரீதியில் போராடும் சமூக அமைப்பு அன்று உ.பியில் இருந்திருந்தால் 1949ல் ராமர் சிலை பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட போதே அவை அகற்றப்பட்டிருக்கும். காங்கிரசை நம்பியதால் தான் மோசம் போனார்கள் என்பதை உணர்ந்து அத்தகைய அமைப்பைக் கட்டி அமைப்பதில் கவனம் செலுத்தினேன். என் கருத்தில் இன்னும் சிலரும் உடன்பட்டனர். அதன் விளைவு தான் தமுமுக.

மேலும் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.

முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு வன்முறை தடையாக நிற்கிறது என்பது எனக்குத் தெரிந்த பின் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். இரட்டை நிலை மேற்கொண்டதில்லை. அது தவறான கருத்து என்று தெரிந்த போது அதில் உறுதியாக இருக்கிறேன். இப்போதும் என்னிடம் இரட்டை நிலை இல்லை. ஒரு காலகட்டத்தில் நான் இரட்டை நிலை எடுத்ததில்லை.

ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராடுவதால் மட்டுமே சமுதாயம் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடியும் என்ற கருத்தை திவிரமாகப் நான் பிரச்சாரம் செய்து வருவதன் காரணமாகவும் ஜிஹாத் என்பதற்கு தவறான விளக்கம் கூறுவோருக்கு எதிராக தக்க மறுப்புக்கள் அளித்து வருவதன் மூலமாகவும் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வன்முறைக்கும் ஜிஹாதிற்கும் உள்ள வேறுபாட்டைத் தக்க ஆதாரத்துடன் நான் விளக்குவதால் எற்பட்ட கோபம் காரணமாக இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

அடுத்து பொது மேடையில் விவாதிக்க அழைப்பு விட்டுள்ளனர். இது குறித்து இந்தப் பேட்டி வெளியாவதற்கு முன்பே விவாத அழைப்பை ஏற்றுள்ளேன். பார்க்க

முறைப்படி குற்றச் சாட்டுக்களை பட்டியல் போடட்டும். அவர்களைப் பற்றி அம்பலப்படுத்தும் பட்டியலை நான் போடுகிறேன். முறையாக ஒப்பந்தம் செய்து விவாதிக்க நான் தயார்

-Thanks:http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/nakeeran_kobal/#.V2ylq9J97IU14743_1