நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்.

அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே….     நக்கீரன் இதழின் தரத்தைப் பற்றியும், எவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் செல்லக் கூடும் என்பதைப் பற்றியும், சவுக்கு பல முறை எழுதியிருக்கிறது.

 

நேற்று, சவுக்கு தளத்தில், நக்கீரன் அலுவலகத்தில் உள்ளே நடந்த மோதல்கள் குறித்து, செய்தி வெளியிடப் பட்டிருந்தது.  அந்தச் செய்தி இதுதான்.

“நக்கீரன் வார இரு முறை வார இதழின் நிருபர்கள் கூட்டம், 29.05.2011 அன்று காலை 10மணிக்கு நக்கீரன் அலுவலகத்தில் நடந்தது..

தமிழகம் முழுவதும் நிருபர்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து, அதை செய்தியாக்க வேண்டும் என்று கூறிப்பிடப்பட்டிருந்தது.

இணை ஆசிரியர் காமராஜ் தலைமை நிருபர்கள் கூட்டம் தொடங்கியது, ஆசிரியர் கோபால் வந்தவுடன், எங்க தம்பி சிவசுப்ரமணியனை காணவில்லை உடனே காமராஜ், அவரை கூப்பிடவில்லை, ஏன்.. சிவா நம்ம வளர்ச்சிக்கு உழைத்தவன், உங்கள் விருப்பு வெறுப்பை நிருபர்களிடம் காட்டாதீர்கள், நக்கீரன் வளர்ச்சி என்பதே வீரப்பனை வைத்துதான், அதில் தம்பி சிவாதான் முக்கிய பங்கு ஆற்றினார், என்று கூறிவிட்டு எழுந்து அவர் அறைக்கு போய்விட்டார்..

நிருபர்களிடம் கருத்து கேட்ட போது, ஈரோடு நிருபர் ஜிவா, நாம் திமுக ஆதரவு பத்திரிகை என்பதை நிருபித்து வருகிறோம், நடு நிலை பத்திரிகையாக இருந்தால் மட்டுமே விற்பனை உயரும் என்றவுடன், காமராஜ் உனக்கு என்ன தெரியும் செய்தி அனுப்பவது இல்லை, வீரப்பன் பெயரை சொல்லி உங்க பொழப்பு ஓடுது என்ற கண்டபடி பேச, ஜிவா கூட்டத்திலிருந்து வெளியேறி கோபால் புகார் கூறினார், திரும்பவும் கூட்டத்திற்கு வந்த கோபால், ஜிவாவிடம் எதாவது கேட்க வேண்டுமானால் தனியாக கேளுங்கள், அவர்கள் வீரப்பன் தொடபான வழக்கில் ஆஜராவதில் காலம் போய்விடுகிறது, சீனியர் நிருபர்களை எல்லாம், அனைவர் முன்னாடி பேசுவது சரியல்ல என்று கூறிவிட்டு வெளியேறினார்..

காமராஜ் செல்போன் பேச கூட்ட அறையிலிருந்து வெளியே வர, நிருபர் பிரகாஷ், ஜிவாவை பார்த்து ஆசிரியரிடம் சொன்னால் பருப்பு வேகாது, காமராஜ் அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு போய் பொழப்பை நடத்து என்று கிண்டலடிக்க, ஜிவா, பிரகாஷ்யை அடிக்க பாய, கூட்டத்தில் அடிதடி நடந்தது. பிறகு காமராஜ் சமாதானம் செய்தார்..

கடைசியில் காமராஜ், ஆசிரியரை ஜெயலுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா, மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்துள்ளார்(இதை எல்லாம் ஒருமையில் பேசினார் அவ, இவ என்று) ஒவ்வொரு நிருபரும் அதிமுகவுக்கு எதிராக செய்தி சேகரித்து அனுப்ப வேண்டும்..

அதிமுக எதிராக ஆதாரத்துடன், புகைப்படத்துடன் செய்தி கொடுக்கும் நிருபர்கள் மாதம் மாதம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்பட்டும் என்று காமராஜ் பேசிய பிறகு கூட்டம் முடிந்தது..”

 

tannivandiஇதைப் படித்த நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் தனது 96770 91357 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டார்.  இது இதழியல் நெறிகளை மீறிய செயல் என்று, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ் கருத்து தெரிவித்தார். அவ்வாறு அவர் கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உண்டு. நம்மை கடிந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அதை எப்படிச் செய்ய வேண்டும் ? எடுத்த எடுப்பில் அவதூறான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதா ?

 

நக்கீரன் எடிட்டோரியல் அறையில் நடந்தவைகளை எழுதுவதற்கு சவுக்குக்கு உரிமை இல்லை என்றால், நித்யானந்தாவின் படுக்கையறையில் நடந்தவைகளை படம் பிடித்துக் காட்டுவதற்கு மட்டும் நக்கீரன் இதழுக்கு உரிமை உண்டா ?

 

சவுக்குக்கு தகவல் சொல்லுபவர்கள், பல்வேறு இடங்களில் இருந்து சொல்வார்கள்.   அவற்றின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, அவை பதிவேற்றப் பட்டு வருகின்றன.   சவுக்குக்கு யார் தகவல் தருகிறார்கள் என்பது குறித்த எவ்வித புரிதலுமின்றி, சில பத்திரிக்கையாளர்களைப் பற்றியும், சில காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், மிகவும் கொச்சையாக பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் இன்று காலை 10 மணிக்கு, நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை அர்ச்சனை செய்தார்.

 

பிரகாஷ் இது போல அவதூறான வார்த்தைகளால் சவுக்கை ஏசியதால், அது சவுக்குக்கு அவமானம் அல்ல…. இது போன்ற தரந்தாழ்ந்த நபர்களை தலைமை நிருபராக வைத்திருப்பதன் மூலம், நக்கீரன் இதழின் தரம் தெரிகிறது.

 

இந்த உரையாடலின் ஒலிப்பதிவை சவுக்கு அப்படியே சமர்ப்பிக்கிறது. மிக மிக அவதூறான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது இந்த உரையாடல். வாசகர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

{mp3}Record003{/mp3}

Thanks :Savukku

0 நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா..

இன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது.  நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது.  இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.

அப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … ?  அது ஒரு கவர் ஸ்டோரி.   “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு.  உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது.   அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க.  நான் தவறான விதையை விதைச்சிnakkheeran_gopal4ட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.  என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம்.  இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது.  அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.

”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது.  எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார்.  அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார்.   கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க.  அப்ப பொன்னையன் இருந்தாரு.  அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு.  இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார்.  அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா ?  பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க.  அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும்.  அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க.  ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு.  நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை.  மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார்.  இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.

nak1

nak2

nak3

இதுதான் அந்தச் செய்தி.  இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல.  மிக மிக விஷமத்தனமாகது.  அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.   ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது.  சவுக்கில் கூட, நக்கீரனைப் பற்றி அச்சு வடிவில் ஆதித்யா,  என்றெல்லாம் நக்கீரனைப் பற்றி பலமுறை எழுதப் பட்டுள்ளது.  நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பேசினார் என்பதை, சவுக்கு வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.  இதற்குப் பிறகும், இப்படிப் பட்ட ஒரு நபரை, நக்கீரன் இதழின் தலைமை நிருபராகவே இன்னும் பணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தப் பத்திரிக்கை எப்படிப் பட்ட பத்திரிக்கை என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் இதழின் தரத்தைப் பாருங்கள் என்ற கட்டுரையை படியுங்கள்

வியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி.   இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.

ஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம்.   இதை மன்னிக்கவே முடியாது.   இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா ?   நிச்சயம் தெரியும்.  பிறகு ஏன் வெளியிட்டார்கள் ?

நித்யானந்தாவை மிரட்டி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல்.  இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும்.  வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.   அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன்.   “லைவ் கவரேஜ்….  ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து.  நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள்.   திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்து, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.

பத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ற கட்டுரையைப் படியுங்கள்.  காமராஜின் பவுசு தெரியும்.

இதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும்.  அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர்.   இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர்.  பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.   முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்.    அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர்.   ஜின்னா மற்றும் அவரது டீம்,  நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது.   நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.   அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர்.  அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது.  காலை 10  மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.

அடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது.   அங்கிருந்த காவலர்களை தாக்கியது.   அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.  சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.

அதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது.   அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது.   இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு.  அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்கள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.   அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும்.  ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.

திமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.  இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு.   நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.

அதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்…  அரசுப் பணி என்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா ?   இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா ?  காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா ?

நக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?  அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது.  அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ?

அதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.  ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின்  மென்னியை முறிக்க வழியா இல்லை ?  நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா ?  காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா ?

யாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது”  என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை.   சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

இந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார்.  அவரைப் போன்ற ஒரு மங்குணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும்.  தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும்.  ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன்.   வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..

IMG_5398

IMG_5402

உதவி ஆணையர் செந்தில் குமரன்

நக்கீரன் மீதான தாக்குதல் குறித்து சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.

IMG_5278

போராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்

IMG_5288

 

அதிமுக மகளிர் அணியினர்

IMG_5289

கைது செய்யப் படும் அதிமுகவினர்

IMG_5290

IMG_5298

மங்குணி எஸ்.பி பாஸ்கரன்

IMG_5306

IMG_5318

IMG_5329

கடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா

IMG_5341

IMG_5342

IMG_5344

காவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்

IMG_5348

IMG_5361

 

IMG_5364

IMG_5378

IMG_5379

IMG_5380

IMG_5413

IMG_5405

IMG_5423

சாணியைக் கழுவும் காவலர்

IMG_5429

IMG_5431

Thanks:savukku

அட அப்படியா… ? வெக்கங்கெட்ட நக்கீரன்…

கடந்த வாரம் கூடங்குளத்தில் நேர்ந்த கலவரங்களை தினகரன் நாளேட்டின் புகைப்பட நிபுணர் பரமக்குமார் என்பவர் உயிரைப் பணயம் வைத்து எடுத்திருக்கிறார்.   அந்தப் புகைப்படங்களை அவர் ராதாபுரம் தாலுகாவில் உள்ள ஒரு ப்ரவுசிங் சென்டரில் வைத்து தினகரன் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.   அப்போது அவருக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார் என்பவர் போன் செய்து, எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.   நான் ராதாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் சென்டரில் இருக்கிறேன் என்று சொன்னதும் அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்.   அவர் போவதற்குள் பரமக்குமார் கிளம்பி விட்டார்.   நக்கீரன் புகைப்படக் கலைஞர் ராம்குமார், பரமக்குமார் அமர்ந்திருந்த அதே கணினியில் அமர்ந்து, அவர் டெம்பரவரி போல்டர்களில் சேமித்து வைத்திருந்த கூடங்குளம் மோதல் தொடர்பான புகைப்படங்களை, அசோசியேட்டட் ப்ரஸ் என்ற வெளிநாட்டு புகைப்பட நிறுவனத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.  விற்ற பின்னால், நக்கீரன் அலுவலகத்துக்கும் அந்தப் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த விபரம் நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு புகாராகப் போய், தற்பாது ராம்குமாரை விசாரணைக்கு அழைத்தால் வர மாட்டேன்கிறாராம்…  நல்லா நடத்துறீங்கய்யா பத்திரிக்கை..

Thanks:savukku

நக்கீரன் பொய்ச் செய்திகளை வெளியிடுவது வழக்கமே.. காமராஜ்

நக்கீரன் பத்திரிக்கை, எப்படிப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.   உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே….

 

நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

 

இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம்.   அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம்.

 

நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார்.   சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது.

IMG_9359

இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார்.

 

அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்.   சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.   இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

 

குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ?   மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது.

dinakaran

தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ?

 

“ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்..   அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது.   வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார்.

dinakaran_1

குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார்.   அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது.

 

எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.   சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

 

இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

1

சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது.

 

இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

 

நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார்.

IMG_9358

இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ்.   ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான்.   அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது.   ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்….   அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம்.   (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.

 

குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.   ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை.

IMG_9358

அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான்.   இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம்.   முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார்.

kamaraj-060411

 

kamaraj-06048

 

kamaraj--c-060411

 

மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்…..   அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர்.   “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்.

 

எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ?

 

தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.   இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

DSC_5655

குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது.

Thanks:சவுக்கு

ஒரு அவதூறு வழக்கின் கதை -சவுக்கு இணையம்

சவுக்கு இணையதளத்துக்கும் நக்கீரன் காமராஜுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.   2009ம் ஆண்டு சவுக்கு இணையதளம் தொடங்கப்பட்டபோது சமூக ஊடகங்கள் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.   பத்திரிக்கையாளர்கள் இழைக்கும் தவறுகள், அவர்களின் அரசியல் சாயங்கள் குறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வெளிவராது.  அப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் நக்கீரன் காமராஜ் குறித்து சவுக்கு தளத்தில் விரிவாக செய்தி வெளியானது.   அந்த கட்டுரை சவுக்கு தளத்தை பத்திரிக்கையாளர்கள் இடையே அறிமுகப்படுத்தியது.   காமராஜ் குறித்து வெளியான கட்டுரையை அவருக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்கள் நம்பவில்லை.   உள்நோக்கத்தோடு பார்ப்பன சக்திகளின் தூண்டுதலில் பொய் எழுதப்பட்டது என்று செய்தி பரப்பினார்கள்.   ஆனால் காமராஜ் குறித்து தொடர்ந்து சவுக்கு தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டே வந்தது.   2010ம் ஆண்டு, 2ஜி ஊழல் தொடர்பாக நடந்த சோதனையில், காமராஜ் வீடு சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, சவுக்கு சொல்லிய செய்திகள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமானது.

????????????????????????????????????

அண்ணாமலை காமராஜ்.   ஒரு பத்திரிக்கையாளராக பரவலாக அறியப்பட்டாலும், 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஒரு குறுநில மன்னனாகவே செயல்பட்டார் காமராஜ்.   நக்கீரன் இதழை உருவாக்கியவர் கோபால் என்றாலும், நக்கீரனின் மூளையாக செயல்பட்டது காமராஜே.  அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளுமே காமராஜுக்கு நெருக்கம் என்றாலும், திமுகவோடு அவர் உறவு பிரிக்க முடியாதது.   திமுக அரசில் காமராஜ் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் என்றால், எந்த நேரம் வேண்டுமானாலும், முதலமைச்சர் கருணாநிதியின் அலுவலகத்திலோ, வீட்டிலோ நுழைய முடியும்.   முதலமைச்சர் வீட்டிலேயே நுழைய முடிகிறதென்றால், இதர அமைச்சர்களிடம் அவரது செல்வாக்கு குறித்து சொல்ல வேண்டியதில்லை.  ஒரு தொலைபேசி அழைப்பிலேயே திமுக அரசில் எந்த காரியத்தை வேண்டுமானாலும் செய்து முடிக்கக் கூடிய செல்வாக்கை காமராஜ் பெற்றிருந்தார்.

இவரது இந்த நெருக்கம் காரணமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், காமராஜ் கேட்டதையெல்லாம் செய்து முடித்தனர்.   திமுக அரசில் முடிசூடா மன்னனாக கருணாநிதியின் குடும்பத்தை கூட விடாமல் மிரட்டி அதிகாரம் செலுத்தியவர் அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்.   இவரும் காமராஜுக்கு மிகவும் நெருக்கம் என்பதால், இவர்கள் இருவரும் 2006 முதல் 2011 வரை அடித்த கூத்துக்களை ஒரு புத்தகமாகவே, நக்கீரன் பதிப்பகம் மூலமாக வெளியிடலாம்.  உளவுத்துறையின் தலைவராக ஜாபர் சேட் இருந்ததால் ஜாபருக்கு பிடிக்காதவர்கள், ஜாபரின் அரசியல் எதிரிகள், காமராஜின் எதிரிகள் என்று ஒருவர் விடாமல் அவதூறு செய்து, செய்திகள் வெளியிட்டனர்.     2ஜி ஊழல் நாடெங்கும் பற்றி எரிகையில், நக்கீரன் மட்டும், 2ஜியில் ஊழலே நடைபெறவில்லை என்று தொடர்ந்து எழுதி வந்ததற்கு முழுக் காரணம், காமராஜ் மட்டுமே.   அதிமுக அரசு பதவியில் இருக்கையில், பின்னாளில் அரசியல் ப்ரோக்கராக மாறிய ராமானுஜத்தோடு நெருக்கமாக இருந்தார் காமராஜ்.  அந்த தொடர்புகளின் வழியாகத்தான், கடத்தல் மன்னன் வீரப்பன் குறித்த செய்திகளை நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டது.

ஷபீர் அகமது என்ற இளைஞர், நக்கீரன் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு இளம் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர்.   காமராஜோடு ஒப்பிடுகையில் பணியில் மிகவும் இளையவர்.    அவரோடு காமராஜ் மோதல் போக்கை கடைபிடித்து, அவர் மீது வழக்கு தொடுத்து அவரை தொல்லைக்குள்ளாக்கியதன் பின்னணி என்ன ?    ஒரு சாதாரண இளம் பத்திரிக்கையாளரை ஒரு மூத்த பத்திரிக்கையாளரான காமராஜ் எதிரியாக கருதியதன் பின்கதை என்ன ?

2010ம் ஆண்டில் திமுக அரசில், அறிவாலயத்தில் பேப்பர் பொறுக்கியவன், கக்கூஸ் கழுவியவன், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், போன்றவர்களுக்கெல்லாம், அரசு கோட்டாவில், “சமூக சேவகர்” என்ற பெயரில் அரசு நிலங்களை சகாய விலைக்கு அள்ளிக் கொடுத்த விவகாரம் என்டிடிவி இந்து செய்தி சேனலில் வெளியாகியது.   ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல், அமைச்சர்களின் மனைவிகள், உதவியாளர்கள், என்று சகட்டு மேனிக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருந்தன.    இப்படி வீட்டு மனை வாங்கியதில் அம்பலப்பட்ட இருவர், நக்கீரன் காமராஜ் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்.  இருவருமே தங்கள் மனைவிகளை சமூக சேவகர் என்று அடையாளப்படுத்தி வீட்டு மனை வாங்கியிருந்தனர்.   அந்த வீட்டு மனைகள் ஒரு சில வாரங்களிலேயே பெரும் கட்டுமான நிறுவனங்களிடம் விற்கப்பட்டன.   இந்த ஊழல் முதல் முதலாக சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

jaffer sait 2

என்டிடிவி செய்தி நிறுவனமும் இந்த ஊழல் குறித்து முழுமையான செய்தியை வெளியிட்டது.  அந்த செய்தியின் பின்னணியில் இருந்தவர் செய்தியாளர் ஷபீர்.     இரவு பகலாக கடுமையாக உழைத்து ஒரு சிறப்பான செய்தித் தொகுப்பை வெளியிட்டார்.    அப்படி செய்தி வெளியிடப்பட்டபோது, ஜாபர் சேட்டின் மனைவி வீட்டு மனை பெற்ற விவகாரம் குறித்து மட்டும் என்டிடிவி இந்துவில் செய்தி வெளியிடாமல் தடுத்தவர் அதன் ஆசிரியர் சஞ்சய் பின்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலகட்டத்தில் சாதிக் பாட்சா மற்றும் ஆ.ராசாவோடு இருந்த நெருக்கம் மற்றும் தொழில் தொடர்புகள் காரணமாக ஏற்கனவே காமராஜ் சிபிஐ வளையத்தில் இருந்தார்.   அதன் பின்னர் நடந்த சோதனைகள் அனைவரும் அறிந்ததே.

இதற்கெல்லாம் காரணம் என்று காமராஜ் கருதியது, ஷபீர் அகமது மற்றும் சிபிஐயில் அப்போது எஸ்பியாக இருந்த முருகன்.  2ஜி சோதனைகள் முழுக்க முழுக்க டெல்லி சிபிஐ அதிகாரிகளால் நடத்தப் பட்டது என்ற அடிப்படையைக் கூட காமராஜ் புரிந்து கொள்ளவில்லை.    சிபிஐ எஸ்.பி முருகன் மீது, நக்கீரன் கோபாலே தடுத்த பிறகு கூட, ஏராளமான பொய் செய்திகளை வெளியிட்டார் காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னாளில் முருகனுக்கு எதிராக  அவர் வெளியிட முயற்சித்த ஒரு செய்தியே, காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேற காரணமாக இருந்தது என்பது வரலாற்றுச் சுவடு.

ஷபீரை பழிவாங்க காமராஜ் கையில் எடுத்த ஆயுதம்தான் அவதூறு வழக்கு.    அந்த அவதூறு வழக்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்து, பத்திரிக்கையாளர் ஷபீர், விவரிக்கிறார்.

“அது 2010ம் ஆண்டு.  என்டிடிவி குழுமத்தால் அப்போது சென்னையில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆங்கிலச் சேனலில் ஒரு இளம் நிருபராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.   டிசம்பர் 15, 201ம் அன்று, சிபிஐ இந்தியா முழுக்க 2ஜி ஊழல் தொடர்பாக பல்வேறு சோதனைகளை நடத்தியது.  அப்படி சோதனை நடத்திய இடங்களில் ஒன்று நக்கீரனில் இணை ஆசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த காமராஜின் வீடு.

திமுகவோடு காமராஜ் கொண்டிருந்த நெருக்கம் ஒன்றும் ரகசியமானதல்ல.   குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் இடையே அது வெளிப்படையானதொன்று.   காமராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் இதர 2ஜி சோதனைகள் செய்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்பதால், தேசிய ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இச்சோதனைகள் குறித்து செய்தி ஒளிபரப்பின.   சிபிஐயில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி மற்ற செய்தி நிறுவனங்கள் போலவே நானும் சோதனைகள் குறித்த செய்திகளை எனது சேனலுக்காக வெளியிட்டேன்.

ஒரு பத்திரிக்கையாளனாக எனது வாழ்வு நக்கீரனில்தான் தொடங்கியது.   நான் அப்படி நக்கீரனின் பணியாற்றியபோது நடந்த சம்பவங்களை மனதில் வைத்திருப்பாரோ என்ன என்று தெரியவில்லை.    2ஜி சோதனைகள் நடந்த ஒரு சில நாட்களிலேயே நக்கீரன் காமராஜ், நான் அந்த சோதனைகள் குறித்து செய்தி வெளியிட்டு அவரை அவமானப்படுத்தியதாக நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடுத்தார். அவரது மனுவில் அவர் “ஷபீர் நக்கீரன் இணையதளத்தில் அக்டோபர் 2006 முதல் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.   அப்படி பணியாற்றுகையில் பல முறை என்னோடு (காமராஜோடு) அவர் உரையாடியுள்ளார். அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் காரணமாக அவர் என் மீது கோபத்தில் இருந்தார்.   பல முறை தனிப்பட்ட வன்மத்தை என் மீது வளர்த்து வந்தார்.   நக்கீரனை விட்டு அவர் வெளியேறிய பிறகு கூட அவருக்கு என் மீதான கோபம் தொடர்ந்து இருந்தது. இந்த உள்நோக்கத்தின் காரணமாக என்னை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார்”

அந்த மனுவில் மேலும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.    “15.12.2010 அன்று என்டிடிவி இந்து சேனல் கீழ்கண்ட செய்தியை வெளியிட்டது.  “காமராஜ் ஆ.ராசா நடத்தும் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.   காமராஜின் மனைவி ஜெயசுதா, நீரா ராடியா நடத்தும் மக்கள் தொடர்பு குழுமத்தின் சென்னை கிளையில் பணியாற்றி வந்தார்.

அந்த சேனலில் இவ்வழக்கின் மூன்றாவது குற்றவாளி ஷபீர் அகமது மாலை 7.30 மணிக்கு ஒரு நேரடி செய்தி வெளியிட்டார்.    சிபிஐ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்  மும்பையில் இயங்கி வரும் மாடர்ன் ஹைடெக் என்ற மென்பொருள் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.   அவரது லேப்டாப் கைப்பற்றப்பட்டது”.

இந்த மான நஷ்ட வழக்கு என்டிடிவி இந்துவின் இணை ஆசிரியர் சஞ்சய் பின்டோ மூத்த ஆசிரியர் ராதிகா ஐயர் மற்றும் என் மீது தொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த மூவரும் உள்நோக்கத்தோடு, தவறான, பொய்யான செய்தியை ஒளிபரப்பினர்  என்றும், இந்த செய்தியை அளித்த வகையில் நான் பொறுப்பானவன் என்றும் கூறப்பட்டிருந்தது.

காமராஜ் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தி கிடைத்ததுமே, என்டிடிவி இந்து அலுவலகமே பதறியது.  டெல்லியிலிருந்து விளக்கம் கேட்டு தொடர்ந்து ஈமெயில்கள் வந்தன.  நாங்கள் ஒளிபரப்பிய செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் ஒளிபரப்பியதற்கான ஆதாரங்களை எடுத்து, எங்கள் மீது மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினேன்.   சஞ்சய் பின்டோ, நீதிமன்றத்தில் ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கு நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

சில மாதங்களில் என்டிடிவி இந்து சேனலுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது.   என்டிடிவி சேனலே நிதி நெருக்கடியில் இருந்ததால், என்டிடிவி இந்து சேனலுக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மை பட்டவர்த்தனமாக தெரிந்தது.  என்னைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலம் இல்லை என்பது புரிந்தது.   வேறு வழியின்றி, ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் பணிக்கு சேர்ந்தேன்.   சில மாதங்களில் என்டிடிவி இந்து செய்தி சேனல், தந்தி டிவிக்கு விற்கப்பபட்ட பிறகு மூடப்பட்டது.

வேறு வேலைக்கு செல்லப் போகிறேன் என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு தொடர்ந்து என்டிடிவி இந்துவில் பணியாற்றி வந்தேன்.  கடைசி நாள், என்னை சஞ்சய் பின்டோ தொலைபேசியில் அழைத்தார்.    “ஷபீர், உன்னுடைய வழக்கை நீதான் நடத்த வேண்டும்.   என்டிடிவி மேலிடம் இந்த முடிவை சொல்லச் சொன்னார்கள்.  உன்னுடைய புதிய நிர்வாகத்திடம் இந்த வழக்கை நடத்தச் சொல்லி கேட்டுப்பார்” என்று கூறினார்.

என்டிடிவி நிறுவனம், சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகாவின் வழக்கை நடத்துகையில், ஹெட்லைன்ஸ் டுடே எப்படி என் மீதான வழக்கை நடத்த சம்மதிப்பார்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.   என்டிடிவி நிறுவனம் என்னை கைகழுவ முடிவெடுத்து விட்டது என்ற உண்மை என் முகத்தில் அறைந்தது.  என் வழக்கை நானேதான் தனியாக நடத்த வேண்டும் என்பது புரிந்தது.

எனக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.    எந்த நிறுவனத்துக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றினேனோ, அந்த நிறுவனம் இப்படி திடீரென்று கைவிட்டது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.   என்டிடிவி இந்து நிறுவனம் இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பது எனக்கு தெரியாது.  ஆனால் சக பத்திரிக்கையாளர்களால் நிர்கதியாக விடப்பட்ட எனக்கு நடந்தது ஒரு பெரும் அநீதி.

அந்த அதிர்ச்சி அதோடு நிற்கவில்லை.   சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மட்டும் ரத்து செய்து கொண்டனர்.    மிக மிக எளிதாக அந்த மனுவில் என்னுடைய பெயரை அவர்கள் சேர்த்திருக்கலாம்.    ஆனால் அப்படி செய்யவில்லை.    திடீரென்று சஞ்சய் பின்டோ என்னை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ப்ளாக் செய்தார்.    இப்படி அவர் ப்ளாக் செய்தது எந்தவிதமான காரணமும் இன்றி என்பது முக்கியமானது.    என்டிடிவியின் நிறுவனர் பிரணாய் ராய் அவர்களுக்கு அனைத்து விவகாரங்களையும் விளக்கி, நீண்டதொரு ஈமெயிலை அனுப்பினேன்.  ஆனால் அவரது கனத்த மவுனம் மட்டுமே இன்று வரை பதிலாக இருக்கிறது.

சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேபிகே வாசுகி தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “காமராஜ் வீட்டில் சோதனை நடந்ததும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதும் இங்கே யாராலும் மறுக்கப்படவில்லை.   இந்த செய்திகள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் விரிவாக செய்தியாக பிரசுரிக்கப்பட்டன.    மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) சோதனை நடந்த இடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்து, அது என்டிடிவி இந்து சேனலில் ஒளிபரப்பாகியது.

ஆனால் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தியை ஒளிபரப்பியிருக்கையில் மூன்றாவது குற்றவாளி (ஷபீர்) மற்றும் காமராஜ் ஆகியோர் இடையே இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக வழக்கு தொடுத்து, அதன் காரணமாக சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ராய் ஆகியோரையும் இந்த வழக்கில் சேர்த்து தொந்தரவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதால் அது ரத்து செய்யப்பட வேண்டும்.”

இந்த மனுவில் என்னுடைய பெயரையும் சேர்த்திருந்தால் என் மீதான வழக்கும் நிச்சயம் ரத்து செய்யப்பட்டிருக்கும்.   ஆனால் என்ன காரணத்தினாலோ நான் தனித்து விடப்பட்டேன்.    என் மீதான வழக்கை என்டிடிவி நிறுவனம் ஏன் நடத்தவில்லை என்பது குறித்து எனக்கு எந்தவிதமான விளக்கமும் எந்தத் தரப்பிலிருந்தும் வழங்கப்படவில்லை.

என்னுடைய நண்பர்களின் உதவியோடு, எழும்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சண்முகம் என்ற வழக்கறிஞரின் தொடர்பு கிடைத்தது.   நான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தேன்.    சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை ரத்து செய்ய நான் எடுத்த முடிவுகள் பலன் தரவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு அவதூறு வழக்குகளில் ஆஜராகியுள்ள ரமேஷ் என்பவரின் அறிமுகம் நண்பர்கள் வழியாக கிடைத்தது.   ஏராளமான அவதூறு வழக்குகளை சந்தித்து வரும் விகடன் நிறுவனம் வழக்குகளை துணிச்சலாக எதிர்த்து சந்தித்து வருகிறதென்றால் அதற்கு காரணம் ரமேஷ்தான்.    ரமேஷ் உடனடியாக எனது வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தார்.   பல ஆண்டு காலம், இரவு பகல் பாராமல் உழைத்த என்னுடைய என்டிடிவி நிறுவனம் என்னை கைவிட்ட நிலையில், எவ்வித கட்டணமும் பெறாமல் ரமேஷ் என் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதித்தது இன்று வரை எனக்கு வியப்பையே ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வழக்குகள் எப்போதுமே உங்கள் நேரத்தை விழுங்கும்.    ஆனால் நாங்கள் விடாமல் போராடினோம்.  மொத்தம் இரண்டு சாட்சிகள்.  தமிழக பிஜேபியின் சமூக ஊடக செயலாளர் சுப்ரமணிய பிரசாத் மற்றும் சாரதி சம்பந்தன் ஆகியோர் அந்த இருவர்.

சுப்ரமணிய பிரசாத் குறுக்கு விசாரணைக்கு வர மறுத்து விட்டார்.   மீதம் உள்ள சாட்சியான சாரதி, தனது குறுக்கு விசாரணையில், காமராஜ் மற்றும் அவர் மனைவி ஜெயசுதாவுக்கு 2ஜி ஊழலில் தொடர்பு உள்ளது என்று சாட்சியமளித்தார்.   இது வழக்கின் போக்கையே மாற்றியது.    இந்த சாட்சியத்துக்கு பிறகு, நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார். 24 ஜனவரி 2017 அன்று ஆறு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன்.

மொத்தம் 2555 நாட்கள்.   ஒரு சக பத்திரிக்கையாளரின் பழிவாங்கும் போக்கால் நான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த நாட்கள்.   நக்கீரன் பத்திரிக்கை அரசின் பல்வேறு அடக்குமுறைகளையும் நெருக்கடிகளையும் எதிர்த்து நீதிமன்றத்தில் போராடிய ஒரு குழுமம்.   அவதூறு வழக்குகளை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றுள்ளது.   எந்த சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடுகிறார்களோ, அதே சட்டத்தை என் மீது பயன்படுத்தி என்னை அலைக்கழித்தனர் என்பதுதான் வேதனையான உண்மை.

பத்திரிக்கையாளர் ஷபீர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ்

ஒரு இளம் பத்திரிக்கையாளராக நான் நக்கீரன் காமராஜை கண்டு அவர் பணியாற்றுகையில் வியந்திருக்கிறேன்.     தமிழ் ஊடகத்திலிருந்து பத்திரிக்கையாளனாக என் வாழ்க்கையை தொடங்கிய எனக்கு என்டிடிவி இந்து முதல் ஆங்கில பணி.   இதன் காரணமாகத்தான் எனது இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறேன்.    உங்களுடன் பணியாற்றும் ஒரு சக பத்திரிக்கையாளனால் நீதிமன்றத்தில் அலைக்கழிக்கப்படுவதும், உங்கள் நிர்வாகம் உங்களை நிராதரவாக விடுவதும் கசப்பான உணர்வுகளேயை தரும்.

இந்தியாவைப் பொருத்தவரை, நீதிமன்ற நடைமுறைகள்தான் தண்டனை.     நீதிமன்றத்துக்கு ஒவ்வொரு நாளும் அலைவதுதான் தண்டனை.    என் வாழ்வின் ஆறு ஆண்டுகளை இந்த வழக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு என் மீது ஏற்படுத்திய தாக்கம் எளிதானது அல்ல.   எனது முதல் திருமண ஆண்டு நாளன்று நான் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி நேர்ந்தது.  வர்தா புயல் காரணமாக வேறு இடத்துக்கு பணிக்கு சென்றேன்.   சென்னையிலோ வேறு ஏதாவது இடங்களிலோ ஏதாவது ஒரு முக்கிய செய்தி சேகரிக்கச் செல்லும் நெரத்தில் எனக்கு நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.   என்னுடைய நேரத்தையும் உழைப்பையும், நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் என்னுடைய வழக்கு அழைப்பதற்காக காத்திருந்து செலவிட்டுள்ளேன்.   அடுத்த தேதி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே அந்த காத்திருப்பு.

என்னுடைய இந்த அலைக்கழிப்பு பத்திரிக்கை உலகில் சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்கொள்வதற்கான வலிமையை எனக்கு அளித்தது.  நான் எந்த குற்றமும் இழைக்கவில்லை.  ஒரு பத்திரிக்கையாளனாக எனது கடமையை செய்ததற்காக பழிவாங்கப்பட்டேன்.   இந்த வழக்கின் முடிவு எப்படிப் போகும் என்று எனக்கு கவலை இல்லை.  ஏனெனில் நான் எந்த நிறுவனத்துக்காக உழைத்தேனோ அந்த நிறுவனம் என் வழக்கை கைவிட்டதன் மூலமாக என்னை தண்டித்து விட்டதாகவே உணர்ந்தேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில் என்னோடு நின்று எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.   இந்த வழக்கை சந்திக்கையில் எப்போதும் நான் தனியாக இருந்ததாக உணரவேயில்லை.  நண்பர்களின் ஆதரவு எனக்கு பெரும் வலிமையை தந்தது.

செவ்வாயன்று, இறுதித் தீர்ப்பை எதிர்ப்பார்த்து நான் காத்திருந்த அன்று, தீர்ப்பு எனக்கு எதிராக வரக் கூடும் என்பதையும் எதிர்ப்பார்த்து தயாராக இருந்தேன்.  எனது நண்பர் மற்றும் பத்திரிக்கையாளர் பாரதி தமிழனிடம் இதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தேன்.  அவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற மேலாளர் ஜேக்கப் மற்றும் அரசு ஆகியோரை பிணையாக நிற்பதற்காக வரச் சொல்லியிருந்தார்.    காலை 10.30 மணி முதல் நாங்கள் அனைவரும் காத்திருந்தோம்.  காத்திருந்த நிமிடங்கள் வலியுடனேயே கழிந்தன.

நீதிமன்றத்தினுள் நான் அழைக்கப்பட்டதும் அரசு எனக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.   என்னுடைய சக பத்திரிக்கையாளர்களால் நான் கைவிடப்பட்டாலும், எனக்கு பல உயர்வான நட்புகள் கிடைத்தன.   “நான் உங்களை விடுதலை செய்கிறேன்” என்று நீதிபதி அறிவித்தபோது நிறைவாக இருந்தது.  தற்போது நான் மீண்டும் என் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

எனக்கு இழைக்கப்பட்ட அநீதி ஏற்படுத்திய கோபம் இன்னும் தணியவில்லை.   ஊடகத்துறை குறித்து பக்கம் பக்கமாக பேசும் என்டிடிவி போன்ற ஒரு நிறுவனம், ரவீஷ் குமார் போன்ற பத்திரிககையாளர்களை வைத்திருப்பதை பெருமையாகக் கூறிக்கொள்ளும் ஒரு நிறுவனம், ஒரு நெருக்கடியான நேரத்தில் என்னை கைவிட்டது என்பதை இந்த இடத்தில் வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.    என்னுடைய விரிவான ஈமெயிலுக்கு பதில் அனுப்ப மறுத்த பிரணாய் ராய் என்ன விதமான ஊடக தர்மத்தை கடைபிடிக்கிறார் என்ற கேள்வியை தவிர்க்க இயலவில்லை.

அவதூறு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்ற நக்கீரன் போன்ற இதழ் எனக்கு எதிரான அவதூறு வழக்குக்கு துணை நின்றது இரட்டை வேடமா இல்லையா ?    இதுதான் அவர்களின் ஊடக தர்மமா ?

இறுதியாக என்னை நிராதரவாக கைவிட்டதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.    இல்லையென்றால், தன்னந்தனியாக நின்று ஒரு வழக்கை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதை தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். எத்தகைய இடர்களையும் துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும், நம்பியவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது, என்பனவற்றை இவர்ளால்தான் கற்றுக் கொண்டேன்.”

என்டிடிவி நிறுவனம் ஏன் ஷபீரை கைவிட்டது என்பதை விசாரித்தபோது பல்வேறு சுவையான தகவல்கள் வெளிவந்தன.

சஞ்சய் பின்டோ, ராதிகா ஐயர் மற்றும் ஷபீர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதை அறிந்துமே, சஞ்சய் பின்டோ, பயத்தில் கதறினார்.    பதறினார்.   எப்படியாவது காமராஜின் காலில் விழுந்து வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்பதற்கு பகீரத பிரயத்தனங்களை செய்தார்.   திமுகவின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காமராஜிடம் பேசுமாறு கூறினார்.   சஞ்சய் பின்டோவின் கல்லூரித் தோழரான தயாநிதி மாறன், மற்றும் பல்வேறு பிரமுகர்களிடம் கெஞ்சினார்.  இறுதியாக காமராஜை காப்பாற்ற ஜாபர் சேட் முன்வந்தார்.    சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயரை கழற்றி விட்டு விடுங்கள்.   ஷபீருக்கு ஒரு பாடத்தை புகட்டுவோம் என்று ஜாபர் பஞ்சாயத்து செய்ததன் அடிப்படையில், என்டிடிவி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  அவர்கள் இருவர் மீதான வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சஞ்சய் பின்டோ

ஒரு வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளரை சிக்கலில் மாட்டி விட்டு, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்ற ஒரு நிலைப்பாட்டை மனசாட்சியை கழற்றி வைத்து விட்டு எடுத்தார் சஞ்சய் பின்டோ.    இத்தனைக்கும் இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.   ஊடக தர்மம், மக்கள் உரிமை, ஜனநாயகம் ஆகியவை குறித்து பெரிய XXXXXX போல, இப்போதும் டெக்கான் க்ரானிக்கிள் போன்ற நாளிதழ்களில் சஞ்சய் பின்டோவின் கட்டுரை வெளிவரும்.   இப்படிப்பட்ட பசுத்தோல் போற்றிய பரதேசிகள்தான் ஊடகங்கள் மூலமாக நமக்கு உபதேசம் செய்கின்றனர். சஞ்சய் பின்டோ குறித்த ஒரு கட்டுரை இணைப்பு  சென்னை உயர்நீதிமன்றம் சஞ்சய் பின்டோ மற்றும் ராதிகா ஐயர் மீதான வழக்கை ரத்து செய்ததற்கு எதிராக இன்று வரை, காமராஜ் மேல் முறையீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரனின் நிலைபாடு என்ன ?

தொடக்கத்தில் காமராஜுக்கு நக்கீரன் நிறுவனம் ஆதரவாகவே இருந்தது.  காமராஜ் வீட்டில் 2ஜி தொடர்பாக நடந்த சோதனைகளை ஊடக சுதந்திரத்துக்கு வந்த சோதனை என்றே நக்கீரன் வர்ணித்தது.   ஆனால் ஒரு கட்டத்தில் நக்கீரனின் வழக்கறிஞர் பெருமாள் அவதூறு வழக்குகள் தொடர்பான நக்கீரனின் நிலைபாட்டுக்கு இது எதிரானது என்றும் வழக்கை தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.   கோபாலே பேசியபோதும், காமராஜ் வழக்கை வாபஸ் வாங்க மறுத்தார்.    இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று கூறி விட்டார்.   காமராஜ் நக்கீரனை விட்டு வெளியேறிய பின்னர்தான், கோபால் தன்னுடைய நிலைபாட்டை தெளிவாக்கினார்.

வழக்கு தொடுத்தாலும், காமராஜ் நீதிமன்றத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார்.    வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு காமராஜ் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.   பல்வேறு அவதூறு வழக்குகளை கையாண்ட அனுபவம் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் குறுக்கு விசாரணையின்போது காமராஜை துளைத்து எடுத்தார்.  பதில் சொல்ல முடியாமல் காமராஜ் திணறினார்.    ஒரு கட்டத்தில் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று கேட்டு, தண்ணீர் குடித்தார்.     தான் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதன் மேலாண் இயக்குநராக இருந்ததாகவும், சிபிஐ சோதனைகளுக்கு 15 நாட்களுக்கு முன்பாக அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ததாகவும், விசாரணையில் காமராஜ் தெரிவித்தார்.    சிபிஐ சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இன்னும் சிபிஐ வசம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படி விசாரணையில் திணறினாலும், அவரது நேரத்தை இந்த வழக்கு ஆக்ரமித்துக் கொண்டாலும், காமராஜ் ஒரு வாய்தா தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகை தந்து இந்த வழக்கை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார்.   ஆனால் பொய் மட்டுமே நிரந்தரமாக வென்று விடுமா என்ன ?   உண்மை இறுதியாக வென்றது.

ஒரு சாதாரண பத்திரிக்கையாளராக, பெரம்பலூரில் இருந்து சென்னை வந்து வாழ்கைகையை தொடங்கிய காமராஜால் இன்று மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் அண்ணாமலை கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி, மின்னம்பலம் பெயரை விலைக்கு வாங்கி இணையதளத்தை நடத்தி வருகிறார் என்றால் அது அவரது நேர்மையால் அல்ல.

ஒரு மனிதன் அவன் பத்திரிக்கையாளனாக இருந்தாலும் அவதூறால் பாதிக்கப்பட்டால் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடர எல்லா உரிமையும் அவனுக்கு உண்டு.  ஆனால் மனைவியின் பெயரில் சமூக சேவகர் சான்றிதழ் வாங்கி, இரண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை திருவான்மியூரில் ஒரு கோடி ரூபாய்க்கு பெற்று, அதை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்த காமராஜுக்கு உண்மையில் மானம் இருக்கிறதா என்ன ?

நக்கி பிழைக்கும் நக்கீரனின் அவதூறும், மிரட்டலுக்கு பணியாத நான்ஸ்டாப் நாயகனும்..

 

நக்கீரனின் பலமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்தவண்ணம் இருக்கிறது..அது சம்பந்தமாக நான்ஸ்டாப் கூரியரின் நிர்வாக இயக்குனர் திரு கே.எஸ்.அவரை தொடர்பு கொண்டு கேட்ட்டபோது..

குறை சொல்பவர்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என இருந்தாலும் சிலரது சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலில் இருக்கிறேன்..
நக்கி பிழைக்கும் நக்கீரனில் ,கோணவாயன் கோக்குமாக்கு கோவாலுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் மானம் விற்று வயிறுநிரப்பும் மாமா மனோ சவுந்தர் பரப்பியிருக்கும் வதந்திகளுக்கு பதில் சொல்வது எனது நோக்கமில்லை..

இந்த தரம்கெடட நக்கீரன் நிர்வாகத்திற்கு அப்படி என்னதான் கோபம் எனது நிறுவனத்தின் மீது என்று கேட்க்கும் நண்பர்களுக்கு தகவலை தெரிவிப்பது எனது கடமை என்கிற காரணத்தால் விளக்கம் தருகிறேன்..

எனக்கு தொழிலில் மட்டுமின்றி சமூக அவலங்களையும்,அக்கிரமங்களையும் அழிப்பதில் அதிக ஆர்வம் உண்டு..மேலும் இயல்பாகவே மிரடடல்களுக்கும்,உருட்டல்களுக்கும் கலங்காத போர் குணம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்..ஆகவே இலஞ்சம்,ஊழல் தேசத்தில் இருக்க கூடாது,வரதட்சணை இருக்க கூடாது,காவல் துறையின் கட்ட பஞ்சாயத்துகள் இருக்க கூடாது என போராடுபவன்..
கடந்த இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு விளம்பரத்திற்காக அதிக நிதி ஒதுக்கிய கால நேரத்தில் அனைத்து ஊடகங்களிலும் நமது விளம்பரம் வந்த வண்ணம் இருந்தது..அந்த நேரத்தில் பல பத்திரிக்கைகள் ,விளம்பர ஏஜென்சீஸ்கள் எங்களது மேலாளர்களை தொடர்புகொண்டு விளம்பரம் கேட்டு வந்தன.. அப்போது இந்த மஞ்சள் பத்திரிக்கையிலிருந்தும் விளம்பரம் சேகரிக்க அதன் பிரதிநிதிகள் வந்தனர்.. இயல்பிலேயே நக்கீரன் மீது நல்ல அபிப்பிராயம்  இல்லை என்கிற காரணத்தாலும் அந்த பத்திரிக்கையில் நமது விளம்பரம் வந்தால் அவைகளில் விளம்பரம் கொடுக்கும் தரமே இல்லாத செக்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனம் போல எனது பிராண்டும் மக்களுக்கு தோற்றமளிக்கும் என்கிற காரணத்தாலும் ,விளம்பரம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தோம்..ஆனால் ஒரு கட்டத்தில் மிரட்டும் தொனியில் பேசிய அவர்களுக்கு நமது அப்போதைய பொதுமேலாளர் இந்த விஷயத்தையும் போட்டு உடைத்தார்..இதில் கடுப்பான அவர்கள் (நக்கி பிழைக்கும் கூட்டம்)நமக்கு எதிரான அணியில் கை கோர்க்க ஆயத்தமானார்கள்..ஏற்கனவே நிர்வாகம் யார் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருந்தனவோ அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி கூடதாக சேர்ந்து சதி செய்ய ஆரம்பித்தான் நக்கீ..இந்த ஆப்பரேஷனின் தலைவன்தான் மாமா சவுந்தர் ..இது போன்ற மிரட்டும் நடவடிக்கைகளுக்கு (ஆப்பரேஷன்களுக்கு)பெயர் நக்கீரனிசம் (தூ ….)
முதல் கட்டுரை: மே 3 ஆம் தேதி நான்கு குற்றவாளிகளை சேர்த்து ஒரு செய்தி வெளியிட போவதாய் மீண்டும் என்னிடம் ஒரு பேரம் நேரடியாகவே பேசப்படுகிறது..ஆனால் கட்டுரை வெளியிடப்படாமல் இருக்க வேண்டும் எனில் ?…….கொடுக்கப்பட முடியாத விலை..முடியாது என்றும் உன்னால் முடிந்ததை பார் என்றும் அந்த விபசார ஊடகத்திடம் சொல்லிமுடித்தேன்..சூழ்ச்சி திட்டம் வெகு கச்சிதமாய் போடப்பட்டது (சதி திட்டத்தால் தமிழக முதல்வரையே சிறை செல்ல வைத்தவர்களாயிற்றே) இந்த ஆப்பரேஷன்களின் (நக்கீரனிசம்) செலவுகளுக்கு வழக்கம் போல எதிரணியில் பேரம் பேசப்பட்டது..ஆனால் அவர்கள் வைத்த ஒரே நிபந்தனை “இனிமே இதுதான்,இது மட்டும்தான்னு” விளம்பரமே வரக்கூடாது..மேலும் நிர்வாகம் நடக்க கூடாது என்கிற இரண்டு மட்டுமே..அதற்கான வியூகம் வகுக்கப்பட்டு ஆப்பரேசன் ஆரம்பிக்கப்பட்ட்து..அதே வாரத்தில் சதாம் உசேன் என்பவனை நிறுவனத்திற்கு ஸ்டாக்கிஸ்ட் ஆக உள்ளே நுழைய வைத்தனர்..
cctv-vadapalani

AC.Anna Durai

 

வடபழனி காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் கமிஷனராக பணி புரியும் “அசிஸ்டன்ஸ் அண்ணாதுரை”மீது நாம் ஏற்கனவே அவரது குற்றங்களை #கருப்பு_எழுத்து_கழகத்தின் முகநூலில் பதிவு ஆதாரத்துடன் பதிவு செய்திருந்தோம்.எனவே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமா மனோசௌந்தர அவரையும் நமக்கெதிராக செய்யப்பட ஊக்குவித்தான்.. ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த குற்றவாளிகளை தயார் படுத்தி பொய்யான அவதூறுகளை செய்தியாக வெளியிடடான் நக்கி பிழைக்கும் நக்கீ ..மேலும் அந்த திருட்டு கும்பலை வைத்தே அஸிஸ்டண்ட்ஸ் அண்ணாதுரையிடம் புகார் கொடுக்க அவர் என்னை தொலை பேசியில் அழைத்த மிரட்டும் தொனியில் பேசவே ..அவரிடம் இதுகுறித்து விளக்கமாக எடுத்து கூறினாலும் பழைய வஞ்சத்தை மனதில் வைத்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் அதோடு நின்றுவிடாமல் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசிய உடன் நாமும் அவரை அதே தொனியில் பேசவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம் ..அதன் பின் நமது சார்பில் நேரடியாக காவல் நிலையம் சென்று நாம் வழக்குக்கு தேவையான ஆவணங்களை வழங்கினோம்..ஆனால் அதையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த உடன் அந்த புகாரை அவரது முன்பாக கிழித்து முகத்திற்கு அருகில் வீசிவிட்டு வந்துவிட்டோம்..மேலும் இந்த வழக்கில் காவல்துறை சம்பந்தப்பட முடியாது என்று தெரிந்த காரணத்தால் அவர் அமைதி காத்தார்..எப்படியேனும் வழக்கு பதிந்து நிறுவனத்தை மூடி விடலாம் என்கிற நக்கீ சகாக்களின் எதிர்பார்ப்பில் மண் விழவே.. அடுத்த நகர்விற்கு தயாரானார்கள்..

இந்த இடை பட்ட காலத்தில் நக்கீரன் மீதுள்ள வழக்குகள் மாற்று அந்த கும்பல் இதுவரை செய்திருக்கும் கொலைகள் ,கற்பழிப்புகள்,ஆட்கடத்தல்கள்,நில மோசடிகள்,பெண்களின் பெயரில் முகநூல் கணக்கு துவங்கி தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற கிரிமினல் குற்றங்களை ஆதார பூர்வமாய் நமது #கருப்பு_எழுத்து_கழகத்தின் முகநூலில் தொடர்ந்து வெளியிட்டும் இந்த காட்டுமிராண்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன ?என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க நீதிமன்றங்களை நாடினோம்..இந்த செயல்கள் அவர்களுக்கு பதட்டத்தை தந்தது..வழக்கமாக மிரட்டியே பழக்கப்பட்ட நக்கீரனை முதன் முதலாக மிரட்சிக்கு ஆளாக்கிய சம்பவம் ஒட்டு மொத்த நக்கீரன்வாசகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..அது மட்டுமில்லாமல் தெருக்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுட்டு அந்த குரூப்பின் முகத்திரை கிழிக்கப்பட்டது..மேலும் நக்கீரன் புத்தகம் விற்கும் கடைகளுக்கு முன்பக்கம் “மஞ்சள் பத்திரிக்கை விற்கும் தரம் கேட்ட அங்காடி இது இல்லை “என்பது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டது.மேலும் மேலும் http://www.nakki.in என்கிற இணையதளம் மற்றும் தடைசெய் அமைப்பு எனபல்வேறு நெருக்கடிக்கு ஆளாயினர்

இந்த .ஆத்திரத்தின் உச்சத்தில் கோக்குமாக்கு கோவாலும்,மாமா மனோவும் கொந்தளித்தனர். அடுத்த வியூகம் மிகச்சரியாய் செய்யப்பட வேண்டும் என்பதில் சற்று அச்சம் நிறைந்தே செயல்பட்டார்கள்..

இதன் வெளிப்பாடு முத்தையால் பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் #பாலகுமார் என்பவனுக்கு பணத்தை கொடுத்து உடனே முதல் தகவல் அறிக்கையும் பதிய பட்டு.. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத உமர் உசேன் என்பவரை கைதும் செய்தார்கள்..(அவனை(பாலகுமாரன் ) பொறுத்தவரை தனது கடைசி காலத்தில் செய்த ஒரு மிகப்பெரிய தவறு என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை) இந்த கைது திருடர்களை பொறுத்தவரை ஏற்கனவே கவனமாய் திட்டமிடப்பட்டது என்பதால் ..அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது..என்ன கொடுமை எனில்
அவர்களின் திட்டம் அப்போதும் பொய்யாய் போனது..எந்த பத்திரிக்கையும் பொய்யான இந்த கைதை மிகைப்படுத்தவில்லை (தமிழக ஊடகங்கள் இந்த நக்கீரனின் செயல்களால் கரை பட்டுக்கிடக்கிறது என்பது வேறு கதை )

எது எப்படியோ உண்மை மீதும்,உழைப்பு மீதும்,நீதி துறையின் மீதும் அதிக நம்பிக்கை இருக்கிறது…நீண்ட நாள் பொய் வாழாது என்பதிலும் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது..அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பிரசனைகளையும் நான் ஒரு வாய்ப்பாகவே பார்ப்பேன் அந்த முறையில் இந்த பிரச்சனையின் மூலம் நானும் ஒரு பத்திரிகையாளன் என்பதை நினைவு படுத்தி ..அக்கிரமங்களை அழிக்க பத்திரிக்கை துறையில் எனது நிர்வாகமும் கால் பதிக்கிறது… இது போன்ற அயோக்கியர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிடுவது மட்டுமில்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரும்வரை ஓயப்போவதில்லை.. என்று முடித்தார் மேலும் இது குறித்த விளக்கம் இன்னும் விரிவாக அளிக்கப்படும் என்கிறார் புன்னகை சற்றும் குறையாமல்..

 

 

ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஆபாச நக்கீரன் பத்திரிக்கை

mmm.jpg

12-பக்கம் பேப்பரில் ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,ஜிங்கா கோல்டு,

ஒன்னு தின்னா நின்னு கேக்கும் கேப்சூல்,முட்டி&இடுப்பு வலி போன்ற பக்கங்கள் எண்ணிக்கை 6-..ஒரே வறட்சி,தளர்ச்சி ,சுறுக்கம்,வீக்கம்.என்ற விளம்பரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.மீதி உள்ள பக்கங்களில் பொய் பொரட்டு,.புளூகு,மூட்டை.அவதுறு,ஆபாசம்,அசீங்கம், அடுத்தவர்களை பற்றிய அந்தரங்கம்.இப்படியான பத்திரிக்கையை தடை செய்யலாமா..? செய்ய கூடாதா,,?

இதில் மான் வேட்டை ஓநாய் என்ற தலைப்பில் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை செய்தியை ”தடை செய் அமைப்பு”கண்காணித்தோம்.

அட கருமம் பிடிச்சவனுகளே..ஏண்டா உங்களுக்கு இந்த மானகெட்ட பொழப்பு..அங்கையும் பொய் பொரட்டு…நக்கீ (ஜிங்க செல்வம்) என்ற மூதேவி இச்செய்தி எடுத்த லச்சணம் அசீங்கத்திலும் அசீங்கம் ஏண்டா டேய் காசு பார்க்க எத்தனை பொழப்பு இருக்கு அதைவிட்டுட்டு
(எளவு வீட்டில் எள் உருண்டை திங்க காசு கேக்கலாமா,,?) பொணந்தின்னி பொறம்போக்கு செய்த மொல்லமாரிதனத்தை சம்பவம் காவல்துறையிடம் ஒரு
தகவல் கொடுத்து விட்டு வந்துள்ளது நம் குழு..

எதுக்குடா உனக்கு இந்த மானகெட்டபொழப்பு இதில் நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே..அடேய் நீ திறப்பது எல்லாம் அடுத்தவர்கள் பெட்ரூமைதானே,,அப்புறம் எப்படி குற்றம் நடக்காமல் இருக்கும்,உன் திறப்பில்.

நக்கீரன் பத்திரிக்கை கூலிப்படை நிருபர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள ஓநாய்களை அனைத்தையும் நம் குழு கண்காணிக்கிறது,அத்தனை ஓநாய்களும் ஒழுக்கம் இல்லாத ஒதவாகரைகள்..ஒவ்வொரு நிருபர்களாக நாம் களையெடுப்போம்.மக்கள் மன்றத்தில் வைத்து முகத்திரை கிழிப்போம்.

மான் வேட்டை ஓநாய்கள் பற்றி தகவல் ..விரைவில்..!!

தாய்மார்களை தேடி,தேடி தரிசாக்கிய தண்ணி வண்டி தாமோதரன் பிரகாஷ்..

தறுதலை தாமோதர பிரகாஷ் காம லீலை..நக்கீரன் பராக்..!! பராக்…!!

உன் முதுகில் ஓராயிரம் மூட்டை அழுக்கை சுமந்து கொண்டு அடுத்தவர்களை பற்றிய அவதூறாக செய்தி எழுதி தன் வயிறு வளர்க்கும் ஆபாச மஞ்சள் பத்திரிக்கையான நக்கீ நிருபர்களில் ஒருவன் தான் இந்த தாமோதர பிரகாஷ்..இரண்டாவது மனைவி மனநலம் சற்று பாதிக்கப்பட்டு தனது தங்கையின் பெயரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டொர் நடத்தி  வருகிறார்,பல்லாவரம்,காசிமேடு,சிந்தாதரி பேட்டை உட்பட ஏராளமான இடங்களில் கடந்த 10 வருடங்களில் மட்டும் பல கோடி ரூபாய்  மதிப்பிலான சொத்துக்களை  வாங்கியிருக்கிறான்.. கேரளாவை பூர்விக்கமாய் கொண்ட இந்த காம கண்ணனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்பது  பற்றிய நீதி விசாரணை நடத்தப்படுவதற்கு முன் ..

முதலில் இந்த மூதேவிக்கு ஒரு சபாஸ் போடுவோம்..

மிகவும் திறமைசாலியான இந்த த.பிரகாஷ் என்ற அயோக்கியபயல் அதற்கு நேர்மாறாக பல பெண்களை நாசம் செய்துள்ளான்..அதுவும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து,பார்த்து பதம் பார்த்த பலே கில்லாடியான இந்த  த.பிரகாஷ் .

இந்த த.பிரகாஷ் என்றவனுக்கு எத்தனை மணைவி என்ற அவனுக்கே சந்தேகமாம் அதில் முதல் மணைவியை கொலை செய்தாக தகவல் வருகிறது.

இந்த கொலையை காவல்துறை விசாரிக்கவேண்டும் என்பது தடை செய் அமைப்பின் கோரிக்கையும் கூட..

த.பிரகாஷ் என்பவன் சென்னை முழுவதும் பல பெண்களை நாசம் செய்து ஜட்டியோடு உட்கார வைத்த நற்காரியங்கள் எல்லாம் பிறகு நாம் தெளிவுபடுத்துகிறோம்.

த.பிரகாஷ் என்பவன் தான் நக்கீரன் பத்திரிக்கை ஆரம்பிக்க தொடங்கிய காலத்தில் இருந்து நக்கீக்கு விசுவாசியாக இருந்துள்ளான்.

நக்கீரனில் வரும் தொடர்கதை மற்றும் முதல்வர் ஜெயலலிதா போன்ற மிக முக்கிய அரசியல் பிரபலங்களை பற்றி பார்க்காமலே பல செய்திகளை பார்த்துப்போல் எழுதும் பல கேடி எழுத்தாளன் என்ற பெருமையும் த.பிரகாஷ் உண்டு..

வீரப்பன் முதன் முதலில் சந்திக்க காட்டுக்கு சென்றவனும்.நித்தியானந்த சாமிகளை பற்றி செய்திகளை சேகரித்தவனும்,மற்றும் சிவகாசி ஜெயலட்சுமி வரை இவனது பட்டியல் நீளும்.

நக்கீரன் கோபால் ஒரு டம்மி பீசா என்ற நீங்கள் நினைப்பது என் மூளைக்கு  ஹெவியா கேக்குது.சொன்னாலும் சொல்லாட்டியும்.நக்கீரன் கோபால் ஒரு டம்மிதான்..நக்கீரன் பத்திரிக்கை வளர்ச்சிக்கு ஆபாச செய்தி மட்டும் அல்ல..இந்த பொம்பளை பொருக்கி தாமோத பிரகாஷ் தான்.

இந்த தாமோத பிரகாஷ் என்பவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக நம்மிடம் கொடுத்த புகார் மற்றும் ஆவணங்களை கொண்டு நீதிமன்றம் சென்று இவன் தோலுறிக்கப்படும்.
இந்த நக்கீரன் பத்திரிக்கை கதையும் முடிக்கப்படும்.

இந்த நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எடுக்க முற்பட்ட நமக்கு..இந்த நக்கீரன் நிருபர்களால் பல பெண்களை நாசம் செய்த புகார்களும் சேர்ந்து வருகிறது.
ஆம் அத்தனையும் ஆண் துணையில்லாத பெண்களாக பார்த்து பதம் பார்த்துள்ளான் இந்த தாமோதர பிரகாஷ் ..

“நிலா பெண்” என்கின்ற பெயரில் இந்த காமக்கிருக்கன்முகநூல் பலவற்றை  தொடங்கி பல பெரும்புள்ளிகளுக்கு கொக்கி போட்டு,தன் வசப்படுத்தி  அவர்களையும் அவர்களது வக்கிரபுத்திகளையும் ஆதாரமாக்கி அவர்களிடம் பணம் பறித்த கதையும் அம்பலமாகியுள்ளது..அது என்னவோ ஒரு  பெண் மதுரையிலும் இன்னுமொரு நிலா பெண் சென்னையிலும் வசித்துவருகிறார்கள் சென்னைவாசி நடிகை நயன்தாரா புகைப்படம் இடம்பெற்றுஇருக்கிறது..இந்த வளையில் சிக்கி கொண்ட ஒரு அரசியல் புள்ளி நம்மிடம் அசடு வழியாமல் கேட்டார் “அப்ப எங்க ஆதரவு பத்திரிக்கை இல்லையா”என்று ?அவனிடம் பணத்தை இழந்தவர்கள் பட்டியல் நீள்கிறது..

https://www.facebook.com/nila.penn.50

https://www.facebook.com/profile.php?id=100008649902792&fref=ts

இதனை போன்ற 60 க்கும் மேற்படட நிலா பெண்கள் முகநூலில் வலம் வருகின்றனர் ஜாக்கிரதை நண்பர்களே,,

 

“ஒருவன் மலையாளி,ஒருவன் தெலுங்கன் என இரு மொழிக்காரர்களும் சேர்ந்துகொண்டு , தமிழர்கள் மீது நடத்தும் சைலன்ட் தாக்குதலுக்கு பின்னால் எந்தெந்த தேச/மாநில விரோத சக்திகள் இருக்கின்றன என்பதற்கும் விரிவான விசாரணை வேண்டும்”

.

எந்த நேரமும் சரக்கு மற்றும் பான்பராக் போதையில் திளைக்கும் இந்த தாமோதர பிரகாஷ் பற்றிய கோடம்பாக்கம் குடியிருந்த கதை என்ற தலைப்பில் அடுத்த தொடரில் ஆரம்பிக்கிறேன்…

தொடரும் காம லீலை நக்கீரன் எடிட்டர்.திறுதலை தாமோதர பிரகாஷ்..

அந்தரங்க லீலைகளும்,அவசர ரிஷப்ஷனும்! கோபாலின் கூலிப்படையுடன் ஒரு சந்திப்பு..!!

 

  • கொலை கூட ஒரு கலைபோலவே எங்களுக்கு  பயிற்றுவிக்கப்பட்டது ..
  • 24 மணி நேரமும் நாங்கள் போதையிலேயே திளைக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்ட்து..
  • பரபரப்பான செய்திக்காக அரசின் தலைமை அலுவலக ஒற்றர்களுக்கு பெண்களை கூட்டி கொடுப்பதற்காகவே ஒரு குழு இயங்குகிறது..koolipadai
  • அம்பத்தூருக்கும், பாடிக்கும் நடுவிலே கையகப்படுத்திய ஒரு ஏக்கர் நிலத்திற்காக நாங்கள் செய்த்ததெல்லாம் என்ன..?
  • கோபால்  மகளின் நேரடி ரிஷப்சனில் நீடிக்கும் மர்மம் என்ன?

நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வுகளை….மனம் திருந்திய கூலிப்படை  ஒருவர் விவரிக்கிறார்..விரைவில்…

பயங்கரவாதி நக்கீரன் கோபால்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் சகோ-பி.ஜெ

 

நக்கீரனில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளிக்க இந்தக் கட்டுரை என்றாலும் இதனால் நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் கோபால் பற்றி என் பாதிப்புக்கு ஏற்ப விமர்சிப்பதற்கு உரிமை எனக்கு உள்ளது. எனது நிலையில் இருந்து இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

யார் இந்த கோபால் மாமா

என்னுடைய கடந்த கால வாழ்க்கை என்று இவன் பொய்யை வெளியிட்டுள்ளான். நான் இவனது கடந்த கால வாழ்க்கையின் உண்மையில் சிறு பகுதியுடன் ஆரம்பிக்கிறேன்.
ஷியாம் அவர்கள் நடத்தி வந்த தராசு பத்திரிகையில் ஓவியம் வரைபவனாக இருந்தவன் தான் நக்கீரன் கோபால் என்பவன். இவனுக்கு படம் வரையத் தெரியுமே தவிர ஒழுங்காக எழுதக் கூட தெரியாது.

இப்போதும் மற்றவர்கள் எழுதுவதைத் தான் தன் பெயரில் வெளியிட்டு வருகிறான்.

தராசு பத்திரிகையில் இருந்து கூலிக்கு எழுதும் சிலரைப் பிடித்து வந்து நக்கீரன் பத்திரிகையை ஆரம்பித்தான். ஆனால் பத்திரிகை ஓடவில்லை

 

 

இந்த நிலையில் இந்தியா டுடே பத்திரிகை சந்தனக்காட்டுக்கு தனது செய்தியாளர்களை அனுப்பி வீரப்பனிடம் வீடியோ பேட்டி எடுத்தது. கோபால் அந்த செய்தியாளரைச் சரிக்கட்டி அந்த வீடியோவை வாங்கினான். இந்தியா டுடே வெளியிடுவதற்கு முன்பே வீரப்பன் பேட்டியை இவன் வெளியிட்டான். தனது செய்தியாளர்கள் கஷ்டப்பட்டு காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்ததாக புளுகி பல வாரங்கள் தொடர் வெளியிட்டான். இப்போது தான் நக்கீரன் என்ற பத்திரிகை உலகுக்குத் தெரிய வந்தது.

இவனது அறிமுகமே அயோக்கியத்தனத்தில் தான் ஆரம்பமாகிறது.

 

நக்கீரன் போன்ற பத்திரிகை நடத்த மூளை தேவை இல்லை. பணத்துக்காக எதையும் செய்யும் கேடு கெட்ட குணமும் கற்பனையும் காமராஜ் போல் காசுக்காக எதையும் செய்யும் இழிபிறவிகளின் உதவியும் இருந்தால் போதுமானது என்பதை தராசு பத்திரிகை அனுபவத்தில் இவன் கற்றுக் கொண்டான்.

 

உதாரணமாக ராமதாஸ், முதல்வரைத் தனியாகச் சந்தித்தார் என்ற செய்தி இவனுக்குக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இருவரும் பேசிக் கொண்டது இருவருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் இவன் எழுதுவான். இருவர் மட்டுமே உரையாடிய போது பேசிக் கொண்டது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று சிந்திக்க மறுக்கும் மக்களின் பலவீனம் தான் இவனுக்கு மூலதனம்

ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகை விற்பனைக்காக மாமா வேலைக்கு நிகரான செய்திகளை இவன் எழுதலானான். ஆட்டோ சங்கர் கதை என்ற பெயரில் பெண்களை சூறையாடிய கதைகளை கற்பனை செய்து எழுதி காசாக்கினான். அவ்வளவும் ஆபாசம் புளுகு மூட்டை.

நடிகைகள் பற்றி அந்தக் கால இந்து நேசன் பாணியில் காமக் களஞ்சியத் தொடர் எழுதினான். இதில் பெரும்பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் காம உணர்வை ஊட்டிய எழுத்து விபச்சாரம் தான்

இவன் எழுதியது போல் இவனது குடும்பத்து பெண்களின் காமச் சேட்டைகள் என்று நாம் எழுதினால் அதை இவன் ஜீரணித்துக் கொள்வானா? கோபால் வீட்டுக்குள் ஒருவன் போவதை மட்டும் பார்த்து விட்டு உள்ளே நடந்ததை நாம் இவனைப் போல் எழுதினால் அதை ஜீரணித்துக் கொள்வானா?

 

சட்ட விரோதமாக சந்தன வீரப்பனைச் சந்தித்து தேசத்துக்குத் துரோகம் செய்தவன். சந்தன வீரப்பன் நாடகத்தில் கோடிகளைச் சுருட்டியவன். எழுத்துலகில் காசுக்காக எதையும் செய்யும் இழி பிறவி இவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. அடுத்த இடம் காமராஜ் என்ற எச்சில் பொறுக்கிக்குக் கொடுக்கலாம்.

ரஜினி பெயரை ஆதாயமாக்க ரஜினி ரசிகன் என்று பத்திரிகை நடத்தினான். ஒவ்வொரு நடிகன் பெயரிலும் பத்திரிகக் நடத்தி இளைஞர்களைக் கெடுத்தவன். காசு சம்பாரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கேடு கெட்டவன் தான் இந்தக் கோபால்.

கற்பனை கலந்து எத்தனையோ பெண்களைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி அவர்களின் குடும்ப வாழ்வைச் சீரழித்தவன். முஸ்லிம் குடும்பங்களில் ஏற்படும் குடும்பச்
சண்டைக்குள் நுழைந்து எதையாவது எழுதி அவர்களின் வாழ்வையே சீரழித்து பணம் சம்பாரிக்கும் அற்பன் தான் இந்தக் கோபால்.

இவனுக்கு இதன் வலியை உணரச் செய்வதற்காக இவனது அந்தரங்கச் சேட்டைகள் பற்றியும் மற்றவர்களின் குடும்பம் பற்றி இவன் எழுதுவது போல் இவனது குடும்பம் பற்றியும் யாராவது எழுதினால் நல்லது. இவனுக்கு கொஞ்சமும் சளைக்காத காம?ராஜ் என்பவன் பற்றியும் அவன் எழுதுவது போன்ற நடையில் யாராவது எழுதினால் தான் இவன் அடங்குவான்.

பத்திரிகை இப்போது சுத்தமாக படுத்து விட்டது. எனவே தான் நபிகள் நாயகம் பற்றி இரண்டு தடவை கற்பனை செய்தி வெளியிட்டு பத்திரிகை விற்பனையைத் தூக்கி நிறுத்தப் பார்த்தான். இவனை இப்படியே விட்டால் தொடர்ந்து வாலாட்டுவான் என்பதால் இவனுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

இனிமேல் இவன் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக எழுதினால் பத்திரிகை அலுவகம் இருக்காது என்ற பாடத்தை தவ்ஹீத் ஜமாஅத் படித்துக் கொடுத்தது.

புலி கேசியான புண்ணாக்கு தொடர் எழுதி நிமிர்த்தப் பார்த்தான். ஒன்றும் கை கூடவில்லை

அந்தக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு தான் அட்ரஸ் இல்லாத மூன்று பேரின் பேட்டி என்ற பெயரில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருப்பது.

 

இவன் ஒரு எழுத்து விபச்சாரி என்பதற்கு ஆதாரம் யாரைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் அவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும், என்னிடம் இது பற்றி கருத்து கேட்காமல் வெள்யிட்டதில் இருந்து இவன் எழுத்து விபச்சாரி என்பது உறுதியாகிறது.

எழுத்துலக மாமா நக்கீரன் கோபால் கூறுகிறான்

பேட்டியில் இருந்து

இப்படிப்பட்ட சூழலில் தான், 1997 டிசம்பர் 6-ந்தேதி பாண்டியன், சேரன், ஆலப்புழை ரயில் களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியது. பி.ஜே.வின் வன்முறை கலந்த பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்தான் இதனை செய்திருக்கிறார்கள். குண்டு வைக்க தூண்டியது பி.ஜே.தான். இதனால் அப்போதே பி.ஜே.வை அழைத்து விசாரித்தது தமிழக உளவுத்துறை. சந்தேக வலை தன்னை சுற்றி விழுவதை அறிந்த பி.ஜே., குண்டு வைத்தவர்களை சொல்கிறேன் என்று சொல்லி எங்களை காட்டிக் கொடுத்தார். எங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் குண்டு வைக்கவே கிடையாது” என்று விவரித்தனர்.

இப்படி மூவர் சொன்னதாக இவன் எழுதுகிறான்.

நமது விளக்கம்

இவர்கள் குண்டு வைக்கவில்லை என்று மூவரும் சொல்கின்றனர். குண்டு வைக்காத இவர்களைப் பற்றி நான் காவல் துறையில் சொல்லி இருந்தால் அது எப்படி காட்டிக் கொடுத்ததாக ஆகும்? குண்டு வைக்காத இவர்கள் மீது நான் பொய்யாக தகவல் கொடுத்தால் அதை ஏற்று காவல் துறை வழக்கு போட்டிருக்குமா?

நாங்கள் தான் குண்டு வைத்தோம்; அதை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று இவர்கள் கூறினால் தான் நான் காட்டிக் கொடுத்தாக ஆகும். நாங்கள் குண்டு வைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்’ பீஜே காட்டிக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். முரண்பட்ட இரண்டில் எது உண்மை.

குண்டு வைக்காத நாலு அப்பாவிகளைப் பற்றி இவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே காவல் துறை வழக்குப் பதிவு செய்யுமா? நான் தமிழக முதல்வராக இருந்து அப்படிச் சொன்னால் வேண்டுமானால் நடக்கலாம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு குறித்து காவல் துறை என்னை விசாரித்தது உண்மை. அதற்குக் காரணம் குண்டு வைத்தவர்கள் என் பெயரையும் இழுத்து விட்டது தான். அதை அல் உம்மா தொடரில் விளக்கியுள்ளேன்.

பேட்டியில் இருந்து

குண்டு வெடிப்புகளை தவிர்த்து பார்த்தோமேயானால்… முஸ்லிம்களின் மதகுருக்கள் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் இவர் இருந்துள்ளார். உதாரணத்திற்கு… 8.8.97-ல் கே.கே நகர் பள்ளிவாசல் மதகுரு கமருஸ்ஜமான் கொல்லப்படுகிறார். பி.ஜே.வி.ன் தூண்டுதலில் இது நடந்தது. பள்ளி ஜமாத்தின் புகாரிலே பி.ஜே. பெயர் இருக்கிறது

என்று மூவரும் சொன்னதாக கோபால் சொல்கிறான்.

எனது பதில்

கொல்லப்பட்ட மத குருக்கள் யார்?

கொன்றவர்கள் யார்?

பீஜே சொல்லித் தான் நான் மத குருக்களைக் கொலை செய்தேன் என்று யாராவது போலீஸிலோ நீதிமன்றத்திலோ சொல்லி இருக்கிறார்களா?

அப்படிச் சொல்லி விட்டு பீஜே பின்னணியில் இருந்தார் என்று கூறினால் தான் அது பதில் சொல்லத் தக்கதாக இருக்கும்.

பள்ளி ஜமாஅத்தின் புகாரிலேயே பிஜேயின் பெயர் இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பள்ளி ஜமாஅத்தின் புகாரின் என் பெயர் இருக்கிறதா என்பது நினைவில் இல்லை. ஆனால் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் ஒருவர் கொல்லப்பட்டால் அதன் பின்னணியில் பலர் சந்தேகிக்கப்படுவார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம். அப்பட்டமாகத் தெரிந்த திருவிடைச்சேரி கொலையில் என் பெயரை சிலர் இழுத்து விடுவதை பார்க்கிறோம்.

ஆனால் கமருல் ஜமான் குடும்பத்தைப் பள்ளி நிர்வாகம் கை விட்டது. அந்தக் குடும்பத்தினர் நான் அமைப்பாளராக இருந்த தமுமுகவை அணுகி உதவி கேட்டனர். அவர்களுக்காக உணர்வு இதழ் மூலம் நிதி திரட்டி அந்தத் தொகையை வழங்கினோம். அவரது பிள்ளைகள் படிப்புக்கும் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்தோம். பள்ளி நிர்வாகிகள் என் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும் அவரது குடும்பத்தினர் அதைப் பொய்யாக்கி விட்டனர்.

குண்டு வைக்காத இவர்கள் பெயரை நான் சொன்னதும் இவர்களைக் காவல் துறை கைது செய்தது என்று கூறுகின்றனர். அப்படியானால் பள்ளிவாசல் நிர்வாகம் என் பெயரைச் சொல்லி இருந்தும் காவல் துறை அந்த வழக்கை ஏன் என் மீது போடவில்லை. அன்று அரசுக்கும் காவல் துறைக்கும் நாங்கள் (தமுமுக) கடும் எதிரிகளாக இருந்தோம். எங்களுக்கு எதிரான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு வாக்கு மூலம் இருந்து அது உண்மையாகவும் இருந்தால் என்னைத் தானே அந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இவர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்பது இவர்களின் வாக்கு மூலத்தில் இருந்தே தெளிவாகிறது.

பேட்டியில் இருந்து

அதேபோல நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவரை கொல்ல சில இளைஞர்கள் போகிறார்கள். அவரை கொல்ல இளைஞர் கள் முயற்சித்தபோது அவரது மனைவி கொல்லப்பட்டு விடுகிறார். அந்த இளைஞர்களை அனுப்பியது பி.ஜே.தான். ஆனால் அப்பாவி இளைஞர்கள் சிலரை இந்த சம்பவத்தில் மாட்டிவிட்டுவிடு கிறார். 14வருடங்களாக இன்னமும் சிறையில் இருக்காங்க அந்த அப்பாவி இளைஞர்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்

எனது பதில்

ஆலிம் ஜார்ஜ் விஷயத்தில் கொல்ல முயன்ற இளைஞர்கள் அப்படி சொன்னார்களா?வாக்கு மூலம் கொடுத்தார்களா? நீதி மன்றத்தில் சொன்னார்களா? அப்படி சொல்லி இருந்தால் இதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகமாவது இருக்கும். நாங்கள் மூவரும் தான் ஆலிம் ஜார்ஜை கொல்ல முயன்றோம் பீஜே தூண்டி விட்டார் என்று கூறப் போகிறார்களா? இந்த வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட  குற்றச்சாட்டு இம்மூன்றும் தான்.

இது தவிர பொதுவாக சில குற்றச் சாட்டுக்களையும் கூறியுள்ளனர்.

பேட்டியில் இருந்து

அதுவும் முஸ்லிம்களிடம் தனது செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சை கையிலெடுப்பது இவரது வாடிக்கை.

எனது பதில்

செல்வாக்கு சரியும் போதெல்லாம் பீஜே இப்படிச் செய்வார் என்ற இந்த அபத்தமே இவர்களைத் தோலுரித்துக் காட்ட போதுமானாது.

செல்வாக்கு குறித்து நான் எப்போதும் பேசுவதில்லை. அதையே ஒரு ஆதாரமாகக் காட்டும் போது அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும்.

ஜுலை 4 மாநாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாநாடு என்றாலும் அதைத் தோல்வியுறச் செய்வதற்காக பீஜே என்ற தனிமனிதனை மையப்படுத்தியே பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். அந்த மாநாடு தோல்வியில் முடிந்திருந்தால் செல்வாக்கு சரிந்து விட்டது எனலாம்.

இவர்கள் சிறைக்குப் போகும் போது இருந்ததை விட இலட்சம் மடங்கு வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இலட்சக்கணக்கானோர் கூடிய மாநாடு சாட்சி

நாட்டின் பிரதமரையே தாமதமின்றி சந்திக்க முடிவது மற்றொரு சான்று.

செல்வாக்கு சரிந்து விட்டது என்பதே பச்சைப் பொய் என்பது இதில் இருந்து தெரிகிறது.

மேலும் நான் செல்வாக்குக்கு என்றும் ஆசைப்பட்டதில்லை. ஜாக் நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நேரத்தில் தான் நான் அதன் பொறுப்பை விட்டு விலகினேன். தமுமுக அபார வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் அதன் முதல் நிலை பொறுப்பாகிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நானாக விலகினேன். தொண்டனாக தொடர்ந்தேன். அதன் பின் தவ்ஹீத் ஜமாஅத் மபெரும் மக்கள் இயக்கமாக உள்ள இந்த நேரத்தில் நான் அதன் தலைவர் பத்வி மேலாண்மைக்குழு தலைவர் பதவி ஆகியவற்றை விட்டு விலகி அதில் உறுப்பினாரக் இருக்கிறேன். ஜெயிலில் இருந்து வந்தவுடன் அமைப்பாளர் பதவிக்கு பேரம் பேசி செல்வாக்கு பெற துடிப்பவர்கள் இதைச் சொல்வது தான் கேலிக்கூத்து.
செல்வாக்கு சரியும் போதெல்லாம் வன்முறை பேச்சைக் கையில் எடுப்பார் என்று கூறும் இவர்கள் எனது வன்முறை பேச்சுக்கு ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட முடியாது.

ஒன்று மட்டும் உண்மை

இவர்கள் கூறுவதில் ஒரு விஷயம் மட்டுமே உண்மை.

1992 டிசம்பர் ஆறில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. சட்டமும் அரசும் முஸ்லிம்களுக்கு நீதி வழங்காது; நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் இருந்தேன். ஆக்ரோஷமாக பேசியுள்ளேன். அல் ஜன்னத்தில் கடுமையான தலையங்கங்களை எழுதியுள்ளேன்.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தான் இருந்தனர். அவ்வாறு தான் இருந்தேன். அதன் காரணமாக சட்டமும் அரசும் நமக்கு எதிராகவே உள்ளன. நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சமுதாயமும் அன்றைக்கு எண்ணியது. அதையே நானும் பிரதிபலித்துள்ளேன். அந்தப் பேச்சுக்களும் அரசுக்கு எதிராகத் தான் இருந்ததே தவிர பிறசமய மக்களுக்கு எதிராக இருக்கவில்லை. புரிந்து கொள்ளாத சிலர்  அந்த நேரத்தில் சிலர் வேறு பாதைக்குச் சென்றிருக்கலாம் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.

உணர்ச்சி வேகத்தில் அந்தக் கருத்தில் இருந்த நான் ஜனநாயக ரீதியில் நாம் போராடாமல் அரசியல் கட்சிகளின் பின்னே சென்றது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று உணர்ந்தேன்.

ஜனநாயக ரீதியில் போராடும் சமூக அமைப்பு அன்று உ.பியில் இருந்திருந்தால் 1949ல் ராமர் சிலை பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட போதே அவை அகற்றப்பட்டிருக்கும். காங்கிரசை நம்பியதால் தான் மோசம் போனார்கள் என்பதை உணர்ந்து அத்தகைய அமைப்பைக் கட்டி அமைப்பதில் கவனம் செலுத்தினேன். என் கருத்தில் இன்னும் சிலரும் உடன்பட்டனர். அதன் விளைவு தான் தமுமுக.

மேலும் வன்முறைக்கும் ஜிஹாதுக்கும் உள்ள வேறுபாடு குர்ஆனைத் தமிழாக்கம் செய்வதற்காக நான் ஆய்வுகள் செய்த போது தெளிவாகத் தெரிந்தது.

முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு வன்முறை தடையாக நிற்கிறது என்பது எனக்குத் தெரிந்த பின் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

நான் தீவிரமான எண்ணப் போக்கில் இருந்த போது தான் சிறைவாசிகளுக்ககாக எந்த விளைவு ஏற்பட்டாலும் கவலையில்லை என்று துணிந்து இறங்கினேன். அந்தக் கருத்தில் நான் இருந்த போது அது சரியானது என்று பட்டதால் நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். இரட்டை நிலை மேற்கொண்டதில்லை. அது தவறான கருத்து என்று தெரிந்த போது அதில் உறுதியாக இருக்கிறேன். இப்போதும் என்னிடம் இரட்டை நிலை இல்லை. ஒரு காலகட்டத்தில் நான் இரட்டை நிலை எடுத்ததில்லை.

ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் போராடுவதால் மட்டுமே சமுதாயம் மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடியும் என்ற கருத்தை திவிரமாகப் நான் பிரச்சாரம் செய்து வருவதன் காரணமாகவும் ஜிஹாத் என்பதற்கு தவறான விளக்கம் கூறுவோருக்கு எதிராக தக்க மறுப்புக்கள் அளித்து வருவதன் மூலமாகவும் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வன்முறைக்கும் ஜிஹாதிற்கும் உள்ள வேறுபாட்டைத் தக்க ஆதாரத்துடன் நான் விளக்குவதால் எற்பட்ட கோபம் காரணமாக இது போன்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

அடுத்து பொது மேடையில் விவாதிக்க அழைப்பு விட்டுள்ளனர். இது குறித்து இந்தப் பேட்டி வெளியாவதற்கு முன்பே விவாத அழைப்பை ஏற்றுள்ளேன். பார்க்க

முறைப்படி குற்றச் சாட்டுக்களை பட்டியல் போடட்டும். அவர்களைப் பற்றி அம்பலப்படுத்தும் பட்டியலை நான் போடுகிறேன். முறையாக ஒப்பந்தம் செய்து விவாதிக்க நான் தயார்

-Thanks:http://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/nakeeran_kobal/#.V2ylq9J97IU14743_1