சென்னை:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த வந்த காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட எஸ்பி. பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன், மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 பேரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த பெண்ணின் பெயரை வெளியிட்டதால் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் சர்ச்சையில் சிக்கினார்.

மேலும், கோவை மாவட்ட புதிய எஸ்பியாக சுஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி டிஎஸ்பியாக சிவக்குமார், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளராக வெங்கட்ராமன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். #PollachiAbuseCase #CoimbatoreSP